tag:blogger.com,1999:blog-364531352024-03-13T08:17:19.816-07:00அக்கினிபுளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.comBlogger123125tag:blogger.com,1999:blog-36453135.post-31866650343102732072013-03-21T22:04:00.000-07:002013-03-21T22:04:33.688-07:00கொண்டாடவில்லையா?
இது நீர்த்துப் போன தீர்மானம்...
இந்தத் தீர்மானத்தால் எந்தப் பயனுமில்லை...
இது இலங்கைக்கு எதிரானது அல்ல...
சீனாவை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம்..
இந்தியா ஏமாற்றிவிட்டது...
இனப்படுகொலை என்ற சொல் இல்லை...
இப்படிக் கேட்டுக்கேட்டு சலித்துவிட்டது...
இப்போது ஒருபடி மேலேறி, அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிக்கப் போகிறார்களாம்...
அமெரிக்கப் பொருள்களின் சில பட்டியல் இதோ. புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-36453135.post-26220315762357516672012-03-05T11:36:00.003-08:002012-03-05T11:36:26.291-08:00தமிழினத்தின் துரதிருஷ்டம்!
தமிழர்கள் துரதிருஷ்டசாலிகள். இல்லையென்றால், ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படும் நேரத்தில், அந்நாட்டு ராணுவத்தின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய பிரிட்டன் பத்திரிகையாளர் மேரி கால்வின் நம்மிடையே இல்லாமல் போவாரா?சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டார்கள், அப்பாவிகள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டது எப்படி என்பதையெல்லாம் தனது புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-36453135.post-30170240539503926632012-02-27T11:15:00.000-08:002012-02-27T11:15:01.184-08:00போர் என்றால் அமைதி!
ஈரான் என்றால் மத அடிப்படைவாதிகளின் நாடு என்கிற கருத்து உலகமெங்கும் விதைக்கப்பட்டிருக்கிறது. ரௌடி நாடு என்று மேல்நாட்டுப் பத்திரிகைகள் வெளிப்படையாகவே குறிப்பிடுகின்றன. இதற்கு ஏற்றாற்போல இஸ்ரேலை வரைபடத்தில் இருந்து அகற்றிவிடுவோம், ஹோமுஸ் நீரிணையை அடைத்து உலகத்துக்கே எண்ணெய் கிடைக்கவிடாமல் செய்துவிடுவோம் என்று ஈரான் தடாலடியாகப் பேசுகிறது. ஆனால் உண்மையில், இந்த இரண்டு செயல்களையும் ஈரானால் புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-36453135.post-86232400522177708682012-02-14T00:13:00.000-08:002012-02-14T02:20:09.200-08:00அட்னானின் புதிய ஆயுதம்!
அவரது பெயர் காதர் அட்னான். வயது 33. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியுள்ள அராபே என்கிற கிராமத்தில் இருக்கிறது அவருடைய வீடு. ரன்டா என்ற மனைவி, இரண்டு - மூன்று வயதில் ஒரு குழந்தை என எல்லாம் வாய்க்கப் பெற்றவர் அவர்.
பாலஸ்தீனத்தில் பலருக்கு நேரும் பயங்கரத்தை கடந்த டிசம்பர் 17-ம் தேதி அட்னான் சந்தித்தார். தடதடவென வீட்டுக்குள் புகுந்த இஸ்ரேலிய வீரர்கள், எந்தக் காரணமும் கூறாமல் அவரைக் புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-36453135.post-20225094980186929922011-12-18T19:38:00.000-08:002011-12-18T19:45:11.118-08:00கூடங்குளம் போராட்ட வெற்றி, தற்காலிக தமிழர்களுக்குத் தெரியுமா?
ஒரு மாபெரும் வெற்றி, ஒற்றை வரிச் செய்தியாகக் கடந்து போயிருக்கிறது. என்னவென்று யோசிக்கிறீர்களா? கிரெம்ளினில் மெத்வதேவும் மன்மோகனும் நீண்டநேரம் பேசினார்கள். இங்கிருந்து சென்ற பல தொழிலதிபர்களின் நிறுவனங்கள் தொடர்பான தரகு வேலை கச்சிதமாக முடிக்கப்பட்டது. இங்குள்ள ஆளை அங்கும், அங்குள்ள ஆளை இங்கேயும் கோர்த்து விடுவதற்கு கொஞ்சம் நேரம். அதன் பிறகு, கூடங்குளத்தில் தற்போதிருக்கும் அணு உலைகளில் புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-36453135.post-71043892756007639772011-10-30T12:49:00.000-07:002011-10-30T12:54:48.540-07:00போதிதர்மனுடன் பிரபாகரனையும் விற்றவர்கள்!
ரோஜா படத்தில் இந்தியனை விற்று வியாபாரம் செய்தார் மணிரத்னம். எரியும் தேசியக் கொடியை அணைப்பதாக ஒரு காட்சி வைத்தார். கல்லாகட்டியது. இப்போது அந்த சீனை நம்மூரில் போட முடியாது. அதனால் இவர்கள் வியாபாரத்துக்கு எடுத்திருப்பது தமிழை. கூடவே தமிழனையும்.
தமிழைப் பற்றி உனக்கு என்ன தெரியும், தமிழ்னா இளக்காரமா என்று ஆங்கிலத்தில் எழுதிவைத்ததைப் போன்றே கதாநாயகி வசனம் பேசினாலும்கூட தமிழர்களின் ரத்தம் புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-36453135.post-73165672925897362102011-10-28T00:33:00.000-07:002011-10-28T00:38:17.599-07:00சகுனிகளின் நியாயத் தீர்ப்பு
நாட்டு மக்களைச் சித்திரவதை செய்தார், எதிர்க்கட்சிகளை ஒடுக்கினார், பத்திரிகைகளை முடக்கினார் என்றெல்லாம் கடாஃபி மீது குற்றம்சாட்டப்படுகிறது. இப்படிக் குற்றஞ்சாட்டும் அமெரிக்காவும் பிரிட்டனும் எப்படிப்பட்டவை தெரியுமா? கடாஃபியை நம்பவைத்து வஞ்சித்த நாடுகள்.
10 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் விஞ்ஞானி ஏ.க்யூ.கானின் அணு ஆயுதக் கள்ளச் சந்தை வந்த பிறகு, அணு ஆயுதத் தொழில் நுட்பம் என்பது கத்தரிக்காய் புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-36453135.post-76793556149726037012011-08-16T22:14:00.000-07:002011-08-16T22:14:56.070-07:00ஊழலை ஒழித்தால் சரக்கு ரேட் குறையுமா?ஊழல் என்பது என்ன? இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமலேயே பலர் அண்ணா ஹசாரேவுக்குப் பின்னால் சாரை சாரையாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஊழலை மருந்து அடித்து ஒழித்துவிட்டால் என்ன ஆகும் என்பதும் பலருக்குத் தெரியாது. நான் ஊழல்வாதியா, ஊழலுக்குத் துணை போகிறேனா என்று யாரும் தங்களைத் தாங்களே கண்ணாடி முன் கேட்டுக் கொண்டதாகவும் தெரியவில்லை. ஏதோ கண்ணுக்குத் தெரியாத, நம்மைத்தவிர பிறர் மட்டுமே செய்யக்கூடியபுளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-36453135.post-85546555794086810852011-07-31T12:22:00.000-07:002011-07-31T12:22:29.364-07:00எகிப்து புரட்சியும் மக்களாட்சியும்எகிப்து மீண்டும் ஒரு குழப்பமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது போலத் தெரிகிறது. ஹோஸ்னி முபாரக் தப்பி ஓடியதுமே வெற்றி கிடைத்ததாக முழங்கப்பட்டது. ஆனால், ராணுவ ஆட்சியாளர்கள் மக்களாட்சியைக் கொண்டு வருவதற்கு அவகாசம் கேட்டார்கள். அந்த அவகாசம் முடிவடையும் காலம் நெருங்கிவிட்டது.
இப்போது மீண்டும் போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. தாஹ்ரீர் சதுக்கத்தில் மீண்டும் மனிதத் தலைகள் நிரம்பியிருக்கின்றன. புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-36453135.post-72766159627747396702011-07-29T12:54:00.000-07:002011-07-29T12:54:53.921-07:00சமச்சீர் கல்வியா, சாதா கல்வியா... குழப்பியது யார்?
சமச்சீர் கல்வியா, சாதா கல்வி வேண்டுமா என்று இப்போது பள்ளி ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் போய்க்கேட்டால் வெறுத்துப் போய்... ஏதாவது ஒன்றைக் கொடு என்றுதான் கேட்பார்கள். ஆனால் இந்த இரண்டு மாதங்களும் எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்று மாணவர்களையும், எதைச் சொல்லித் தருவது என்று ஆசிரியர்களையும் குழுப்பியது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தக் குழப்பத்துக்கும் தாமதத்துக்கும் ஜெயலலிதாவை புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-36453135.post-4942494623293660262011-07-14T12:25:00.000-07:002011-07-14T12:25:54.899-07:00சங்ககராவின் "இனப் படுகொலை'
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டை எவ்வளவு கொடூரமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்பட அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளை வீசிக் கொன்றது. பிடிபட்டவர்களையும் சரணடைய வந்தவர்களையும் சித்திரவதை செய்தது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
இறந்தவர்களின் உடல்களில் இருந்த காயங்களைப் பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-36453135.post-24129315657750573922011-07-09T02:54:00.000-07:002011-07-09T02:59:01.647-07:00சமச்சீர் பாடத்திட்டம்தான் வேண்டும்; இந்த ஜிகினா குப்பையல்ல!ஜெயலலிதா நல்லவர், சுதந்திரப் போராட்டத் தியாகி. ஊழலைப் பொறுக்க மாட்டாதவர் என்று எழுதலாம். கருணாநிதி அப்பழுக்கற்றவர், மொழிப்போர்த் தளபதி. ஊருக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்றுகூட எழுதலாம். அதையெல்லாம் நாம் கேட்கப்போவதில்லை. ஊடகங்களில் எழுதுவதைவிடவா பாடப்புத்தகங்களில் மோசமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் எழுதிவிட முடியும்?
பிஞ்சிலேயே நஞ்சை விதைக்கலாமா, மோசமானவர்களை புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-36453135.post-80072346968923210942011-07-03T12:20:00.000-07:002011-07-03T12:20:59.525-07:00பத்மநாபர் கோயில், ஆதிக்க சாதியின் சுவிஸ் வங்கி! முன்குறிப்பு: இங்கே ஆதிக்க சாதி என்று குறிப்பிடப்படுவது அந்தக் காலத்தைப் பற்றி மட்டுமே. இந்தக் காலத்தில் எல்லோருக்கும் சுவிஸ் வங்கியில் கணக்கு இருக்கிறது. --------------
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள சுரங்க அறைகளின் மர்மம் விலக்கப்பட்டிருக்கிறது. தங்கம், வைரம் என என ரூ.50 ஆயிரம் கோடி அந்த அறைகளில் இத்தனை காலமும் பூட்டிக் கிடந்திருக்கிறது. நம் மக்கள் வழக்கம்போல் இன்னும் புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-36453135.post-71486013510765642692011-04-23T05:50:00.000-07:002011-04-23T05:50:08.072-07:00தந்திரமாக ஒடுக்கப்பட்ட புரட்சி அண்ணா ஹஸாரேவுக்குப் பின்னால் நாடே திரண்டது. சிலர் மெழுகுவர்த்தி ஏற்றினார்கள், சிலர் பேரணி நடத்தினார்கள், மிஸ்டுகால் கொடுத்தார்கள், எஸ்எம்எஸ் அனுப்பினார்கள், பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் பிரசாரம் செய்தார்கள். துனீஷியாவிலும், எகிப்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய புரட்சிகளுடன் ஊடகங்கள் இதை ஒப்பிட்டன. நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான மனநிலை இருக்கும் தருணத்தில் இப்படிப்பட்ட எழுச்சி அவசியமான புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-36453135.post-41784538484657154292011-03-12T21:19:00.000-08:002011-03-12T21:34:45.056-08:00தினமலர் செய்திருக்கக் கூடாது!
ஜப்பானில் சுனாமியால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. சுனாமியின் பயங்கரத்தை நேரடியாக அறிந்தவர்கள் என்ற முறையில் ஜப்பான் சுனாமி காட்சிகளைப் பார்த்த தமிழகத்து மக்களுக்கு அனுதாபம் பிறந்திருக்கும். சுனாமியால் சொந்தங்களைப் பறிகொடுத்தவர்களுக்கு கண்ணீரே வந்திருக்கும். சுனாமியில் உயிர் பிழைத்தவர்களுக்கு பழைய பயங்கரமான மரண ஓலங்கள் நினைவுகள் வந்திருக்கும். சுனாமி செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-36453135.post-68355098579136943622011-02-07T22:05:00.000-08:002011-02-07T22:13:00.080-08:00ஆசிரியர்களை ஏன் அரசு மதிக்கிறது? ஒரு வயிற்றெரிச்சல்"ஓ அவனா? என் ஸ்டூடன்ட்தான்" என்று பெருமையுடன் சொல்லிக் கொள்பவர்கள்தான் ஆசிரியர்கள். பெரிய பதவி ஏதாவது கிடைத்தால், தனக்கு பயிற்றுவித்த ஆசிரியரைத் தேடிக் கண்டுபிடித்து நன்றி தெரிவிக்கும் மாணவர்கள் இன்றும் இருக்கிறார்கள். தமக்குக் கிடைக்கும் கௌரவத்தை தனது ஆசிரியருடன் பகிர்ந்துகொள்ள விரும்புவோர் மிக அதிகம். இது உண்மையான நன்றி நவிலலாகவோ, மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று திட்டியவரை வெட்கப்பட வைக்க புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-36453135.post-3207079809965541762011-02-02T08:51:00.000-08:002011-02-02T08:55:53.272-08:00பிசிசிஐ அணி, இந்தியாவின் அணியா?
இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்வதற்கு பிசிசிஐ என்கிற தனியார் அமைப்புக்கு என்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி அண்மையில் பரபரப்பை எழுப்பியது. இந்தக் கேள்வியைக் கேட்டவர் வேறு யாருமில்லை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்தான். இது ஏதோ விவரம் தெரியாமல் கேட்கப்பட்ட கேள்விபோலத் தோன்றினாலும், இந்திய விளையாட்டுத் துறையின் பல்வேறு அம்சங்களை மறுபரிசீலனை செய்வதற்கு இந்தக் கேள்வி புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-36453135.post-1844553842532499742011-01-31T22:38:00.000-08:002011-01-31T22:38:06.644-08:00இதை வினவு, அதை வினவாதே!தமிழ்நாட்டில் மிக சென்சிட்டிவான பிரச்சனை மீனவர்கள் மீதான தாக்குதல் பற்றியது. ட்விட்டரும் பேஸ்புக்கும் இதுபற்றிய செய்திகளால்தான் இப்போது நிரம்பியிருக்கின்றன. ஆனாலும் மிகச் சொற்ப அளவிலேயே பிரச்னையின் மையம் பற்றி பேசப்படுகிறது. இந்தியா என்பது மிக மோசமான நாடு என்பதைச் சித்தரிக்கும் போக்கைக் காண முடிகிறது. இந்தியா என்பது தற்போதிருக்கும் இந்திய அரசா அல்லது மொத்தமாகவே இந்தியா என்கிற நாடா என்பது பற்றிப் புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-36453135.post-20377877463288787512010-11-18T23:49:00.000-08:002010-11-18T23:49:51.319-08:00செல்டிக் புலியின் வீழ்ச்சி!சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளையும் தைவானையும் ஆசியப் புலிகள் என்பார்கள். 1980-களில் இந்த நாடுகளில் தொழில் பெருக்கம் விறுவிறுப்பாக இருந்தது. முடங்கிக் கிடந்த பொருளாதாரம், அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. இந்த நான்குகால் பாய்ச்சலின் வேகத்துக்காக கிடைத்ததுதான் பொருளாதாரப் புலிகள் என்கிற பட்டம். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையையும் இப்போதைய நிலையையும் ஓப்பிட்டுப் பார்த்தால், இது புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-36453135.post-33175296889446474872010-11-17T06:46:00.000-08:002010-11-17T06:46:02.497-08:00யுவராஜ் சிங்குக்கு முடிவுரை!கிரிக்கெட்டில் நிரந்தரப் புகழுடன் இருக்கும் பெருமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. சச்சின் மாதிரி மிகச் சிலர்தான் அதைப் பெற முடிகிறது. இன்றைய தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்துக்கு ஒரு காலத்தில் அடிதடி வரவேற்புக் கிடைத்திருக்கிறது. இன்று வர்ணணையில் வீரர்களை விமர்சனம் செய்யும் ரவி சாஸ்திரிக்கு செருப்பு மாலையே கிடைத்திருக்கிறது. கபில்தேவ் ஒரு தொடரில் தேவையேயில்லை என்று வெளியே வைக்கப்பட்டார். அதெல்லாம் புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-36453135.post-13742390398846976042010-11-10T03:59:00.000-08:002010-11-10T03:59:56.714-08:00எம்ஜிஆர் ஹீரோ, நம்பியார் வில்லன், மோகன்ராஜை என்ன சொல்லலாம்?மக்களின் மனத்திசையில் நம்மூர் ஊடகங்கள் செல்கின்றனவா அல்லது ஊடகங்கள் காட்டும் வழியில் செல்ல மக்கள் முடிவெடுக்கிறார்களா என்கிற விவாதத்துக்கு இதுவரை முற்றுப்புள்ளி இல்லை. இரு குழந்தைகளை திட்டமிட்டுக் கொன்றதாகக் கைது செய்யப்பட்ட கோவை மோகன்ராஜ் போலீஸ் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதும் இந்த விவாதம்தான் நினைவுக்கு வந்தது. கொடூரமாக் கொலை செய்த மோகன்ராஜ் என்று பெரும்பாலான ஊடகங்கள் எழுதின; பேசின. புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-36453135.post-6539539537497155432010-07-27T12:27:00.000-07:002010-07-27T12:31:25.806-07:00கொரியாவுக்கு குறி!நீண்ட காலமாகவே போக்குக் காட்டிவரும் வடகொரியாவுக்குள் நுழைவதற்கு அமெரிக்கா தேதி குறித்து விட்டது போலத் தெரிகிறது. அண்மையில் உலகப் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இதற்கான திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.
தென்கொரியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விவகாரத்தில் வடகொரியாவுக்குத் தொடர்பிருப்பதாக அவரது தென்கொரியப் பயணத்தின்போது குற்றம்சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து இதுவரைபுளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-36453135.post-14759301506663132042010-07-26T08:12:00.000-07:002010-07-26T08:13:04.365-07:00நமக்கென ஒரு பிரௌசர்- எபிக்
கடைசியாக அது வந்தேவிட்டது. நமக்கென ஒரு பிரௌசர் வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இந்திய இணையப் பயனர்களின் ஆசை நிறைவேறிவிட்டது. "மேட் இன் இந்தியா' என்ற அடைமொழியுடன், இந்தியர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "எபிக்' என்கிற இணைய உலவி இப்போது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதை உருவாக்கியிருப்பது பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.
எத்தனையோ பிரௌசர்கள் அவ்வப்போது வருகின்றன, போகின்றன; இதுவும் புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-36453135.post-59593559390482721712010-07-20T08:34:00.000-07:002010-07-20T08:34:06.331-07:00இஸ்ரேலுக்கு இன்னொரு வாய்ப்பு!போர், அமைதிப் பேச்சு, பயங்கரவாதத் தாக்குதல் போன்றவை மத்திய கிழக்கில் சுழற்சி முறை நடப்புகள். ஒன்றையடுத்து மற்றொன்று நடக்கும். இவற்றில் ஏதாவது ஒரு காரணத்துக்காக உலகச் செய்திகளில் அடிக்கடி மத்திய கிழக்கு நாடுகளின் பெயர்கள் அடிபடும். இது இஸ்ரேல் - சிரியா இடையேயான அமைதிப் பேச்சுக்கான முறை போலத் தெரிகிறது. இப்போது அமைதிக்கான மறைமுக அழைப்பை விடுத்திருப்பது சிரியாவின் அதிபர் பஷார் ஆஸாத். புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-36453135.post-37053708494438613642010-07-10T00:05:00.000-07:002010-07-10T00:05:40.568-07:00ஸ்பெயினின் வெற்றி ரகசியம்!
கால்பந்து ஆட்டம் உணர்வுகளால் நிரம்பியது. ஆனந்தமும் துக்கமும் வந்து வந்து போகும். ஸ்பெயின் இப்போது ஆனந்த உணர்வில் மிதந்துகொண்டிருக்கிறது. இந்த ஆனந்தம் வெறும் அதிர்ஷ்டத்தால் வந்துவிடவில்லை. அதற்குப் பின்னால் அவர்களது மிகப் பெரிய உழைப்பும் கண்டுபிடிப்பும் இருக்கின்றன.
வலுவான தற்காப்பு ஆட்டம், ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டம் ஆகிய இரண்டுமே ஸ்பெயின் அணியின் பலம். ஆனால் இந்த இரண்டையும் புளியங்குடிhttp://www.blogger.com/profile/12616266447570328278noreply@blogger.com6