Tuesday, June 08, 2010

தமிழினிமை அக்காவுக்கு: சண்டை போட்டு நாளாச்சு!

பதிவுலகில் சண்டைகள் ஓய்ந்து போய்விட்டதாகக் கருதப்படுகிறது. இப்போதைக்கு புதிதாகச் சண்டைகள் ஏதும் எழுவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை எனத் தெரிகிறது. ஒருவழியாக இந்தப் பிரச்னையிலிருந்து பத்திரிகை தர்மம் பற்றி தெரிந்து கொண்டாயிற்று. ஊடகங்கள் தங்கள் சோர்ஸ்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று பலர் பாடம் எடுத்தார்கள்.

போன வருஷம் ஏப்ரல் மேயில்கூட இந்த மாதிரி நம்ம தமிழ் வலைப்பதிவர்கள் மத்தியில் இந்த அளவுக்கு உணர்ச்சி இருந்ததா எனத் தெரியவில்லை.  பலர் தீக்குளித்துச் செத்த போதும் வாக்குப் பதிவு பொத்தான்களை அழுத்திய போதும் இப்படியொரு ஆவேசம் எழுந்த மாதிரியாக நினைவில்லை.


-------------------------

தமிழினி அல்லது தமிழினிமை என்ற பெயரைக் கொண்ட அக்காதான் வலைப்பதிவில் நான் நுழைந்த முதல் நாளில் இருந்து என்னுடன் சண்டை போட்டவர்கள். இப்போது சண்டை போட ஆளில்லாமல் பதிவுலக வாழ்க்கை சுவாரசியமற்றுக் கிடக்கிறது.




.
..
...

1 comment:

நசரேயன் said...

இருக்கிற சண்டை போதாதா ?