Monday, January 31, 2011

இதை வினவு, அதை வினவாதே!

தமிழ்நாட்டில் மிக சென்சிட்டிவான பிரச்சனை மீனவர்கள் மீதான தாக்குதல் பற்றியது. ட்விட்டரும் பேஸ்புக்கும் இதுபற்றிய செய்திகளால்தான் இப்போது நிரம்பியிருக்கின்றன. ஆனாலும் மிகச் சொற்ப அளவிலேயே பிரச்னையின் மையம் பற்றி பேசப்படுகிறது. இந்தியா என்பது மிக மோசமான நாடு என்பதைச் சித்தரிக்கும் போக்கைக் காண முடிகிறது. இந்தியா என்பது தற்போதிருக்கும் இந்திய அரசா அல்லது மொத்தமாகவே இந்தியா என்கிற நாடா என்பது பற்றிப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் போக்குத் தொடர்ந்தால் கொஞ்சநாள் கழித்து இந்தியா என்கிற நாடு தமிழர்களின் எதிரி நாடு என்பது போன்ற தோற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. 

விநாயக் சென் உள்பட புரட்சி சித்தாந்தம் கொண்டவர்கள் கூட இந்தியா என்கிற நாட்டை எதிர்க்கவில்லை. இப்போதிருக்கும் பொருளாதார நிர்வாகக் கொள்கைகளையும் அரசியல் சட்டத்தின் ஓட்டைகளையும் போலி அரசியலையும்தான் எதிர்க்கிறார்கள். ஆனால், தமிழர் பிரச்னை பற்றிப் பேசுவோர், இந்தியா துரோகம் செய்துவிட்டது என்று சரளமாக எழுதுகிறார்கள். இந்தியாவை துரோகியாகச் சித்திரிக்கிறார்கள். 


எங்கள் துப்பாக்கிகளை மௌனத்தில் ஆழ்த்துகிறோம் என்று புலிகள் இயக்கம் கூறியதுகூட, இந்தியா மீதான நம்பிக்கையின்பேரில்தான். அவர்கள் நினைத்தபடி நாம் வாக்களிக்கவில்லை, அதனால் ஆட்சி மாற்றம் நடக்கவில்லை. அதனால்தான், எல்லாம் முடிந்து போயிற்று. புலிகள் இயக்கத்துக்கு இருந்த நம்பிக்கைகூட இன்று மீனவர்கள் பிரச்னை பற்றிப் பேசும் தமிழர்களுக்கு இல்லை என்பதுதான் வேதனை. பிரச்னைக்குக் காரணம் இப்போதைய சுயநலமான அரசாக இருக்கலாமே ஒழிய, இந்தியா என்கிற தேசமாக இருக்க முடியாது. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் மறந்துபோவது சிலருக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் ஜனநாயக ஒரு அரசியல் சூழலில் இருக்கும் நமக்கு நல்லதல்ல. கையில் வாக்கு எனும் ஆயுதத்தை வைத்துக் கொண்டு வேறு ஆயுதங்களைத் தேடுவதும் சரியல்ல.

நம்பர் ஒன் தளம் ஒன்றில் காணக் கிடைத்த சில ட்விட்டர் செய்திகள். மீனவர்களுக்கு ஆதரவாக எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி இவை வெளியிடப்பட்டிருக்கின்றன.


    வட இந்தியாவின் காசி ஒரு புனித நகரம். தென்னிந்தியாவின் ராமேஸ்வரம் ஒரு கொலை நகரம். பக்தர்களுக்கு  இரத்த்தீர்த்தம் நிச்சயம் 


    இராமேஸ்வரம் இராமநாதனுக்கு தினமும் மீனவர் ரத்த அபிஷோகம், காசி விசுவநாதனுக்கு பாலாபிஷேகம், இந்து  பக்தர்கள் அறிவார்களா? 


    காசிக்கு போனா புண்ணியம் கிடைக்குமாம். இராமேஸ்வரம் வந்தா சுடுகாட்டு ஓலம் நிச்சயம். மீனவர் சுடுகாடு பராமரிப்பு இந்திய அரசு


    காசி முதல் ராமேஸ்வரம் பாரத ஒற்றுமையாம். செத்து விழும் மீனவனுக்கு உதவாத அந்த ஒட்டுமை – அழகா, அருவெறுப்பா, அலட்சியமா?


    அமர்நாத்துல 5லட்சம் பக்தர்களுக்கு 5லட்சம் இராணுவம் பாதுகாப்பு! இராமேஸவரத்துல ஐநூறு மீனவர்களப் செத்ததுக்கு யார் பொறுப்பு?


    எல்லை தாண்டுற மீனவரை கைது செய்யுது பாக் அரசு. எல்லை தாண்டுற தமிழ் மீனவரை கொல்லுது இலங்கை அரசு!  பதில் சொல் இந்தியஅரசு!


    காஷ்மீரில கல்லெறியும் சிறுவர்களை கொல்வது இந்திய அரசு! வங்க கடலில் மீன்படிக்கும் மீனவரை கொல்வது இலங்கை அரசு!


    காஷ்மீரை சுடுகாடாக்குனது இந்திய இராணுவம். வங்க்கடலை குருதிக்கடலாக்குனது இலங்கை கடற்படை! ஸ்ரீநகர் முதல் குமரி வரை ஓலம்! 


    காஷ்மீருக்கு ஆசாதின்னு அருந்ததிராய் சொன்னா கைது செய்வான்! பாம்பனில் மீனவர் ஆயுதம் ஏந்துனா என்ன செய்வான்?


    சென்னையில் கடலோரகாவல் படை சாகசத்தை நாம் வேடிக்கை பாக்கலாம். வங்ககடலில் மீனவர் சடலத்தை அந்த வீரர்கள் வேடிக்கை பார்ப்பர்!


    கொல்லப்படும் மீனவர்களுக்கு, கொல்லும் இலங்கைக்கு, வேடிக்கை பார்க்கும் இந்தியாவுக்கு – அடையாளமில்லையா? மிஸ்டர் செட்டிநாடு? 


    தப்பு செய்யுற மீனவர்கள கொல்லக்கூடாதாம், கைது செய்யணுமாம்-பிரணாப் முகர்ஜி. எங்க மீனவர்கள் என்ன சாராயமா காய்ச்சுராங்க?


    எல்லை தாண்டிபோறதுனாலாதான் இந்த பிரச்சினையாம்-இந்தியன் நேவி. மீன்பிடிக்கிற மீனவருக்கு எல்லை எப்படி தெரியும் முட்டாள் நேவி?


    ராமன் பாலம் கட்டுனான்ற புளுகு மூட்டைக்கு சேது திட்டத்தை நிறுத்துன உச்சிகுடுமி மன்றம் 500 மீனவர்களுக்கு என்ன பிடுங்கியது? 


    நிரூபமா விஜயம்! கொலைகார ராஜபக்சேவுக்கு உதவும் இந்தியாவுக்கு அங்கீகரிக்கும் உலகத்துக்கு ஒரு நாடக விஜயம்!


    ரஜினி எந்திரனுக்கு பீராபிஷேகம் செய்த ரசிகனே, எம் மீனவர் இரத்தம் சிந்தியபோது உன் சூப்பர்ஸ்டார் எங்கே, சரக்கு அடிக்கிறானோ!


    காவலன் படம் ரீலீசாகவில்லை என்று பொங்கிய இளையதளபதி நம் மீனவர் வீழும்போது அடுத்த பட ஷூட்டிங்கில் பொங்குகிறாரா?


    சீதையை இராவணன் தூக்கியதாக இராமன் தொடுத்தான் யுத்தம். 500 மீனவர் செத்தாலும் இங்கே ஒன்றுமேயில்லை என வெறும் நிசப்தம்!


    ஸ்ரீநகருல கொடி ஏத்த துடிச்ச குரங்கு கூட்டம், சேது திட்டத்தை நிறுத்துன வானரக் கூட்டம் மீனவர் சாகும் போது நல்லா நாடகமாடும்


    தமிழக மீனவர்கள் நடுக்கடலில் பலி என்று கொன்னவனை மறைத்து செய்தி போடும் இந்துராம்- லங்காரத்னாராம்- வெட்கம் கெட்டவராம்!


    செத்து விழும் மீனவரை காப்பாற்றவோ, தடுக்கவோ  வக்கில்லாத இந்திய அரசுக்கு, ஐ.நா சபையில் வல்லரசு தகுதி ஒரு கேடா?


    காஷ்மீரை விடமாட்டோமென கொக்கரிக்கும் தேசபக்த குஞ்சுகளே, எம் மீனவரை காப்பாற்றாத இந்தியாவில் நாங்கள் ஏன் இருக்க வேண்டும்?

இந்த ட்விட்டர் செய்திகள் மீனவர்களுக்கு ஆதரவாக அனைவரையும் இணைத்துவிடும்தானே?

..

..