Monday, March 08, 2010

மகளிர் மசோதாவுக்கு எதிராகக் கூட்டுச் சதி?

என் நண்பன் ஒருவன் சர்ச்சைகளை உருவாக்குபவன். அவன் என்னைச் சந்திக்க வருகிறான் என்றாலே லேப்டாப்பில் கூகுளை ஓபன் செய்து வைத்துக் கொள்வேன். அந்த அளவுக்கு என் மூளைக்கு எட்டாதவற்றை கேட்டு டப்பாவாக்குவான். இன்னைக்கு என்னவோ "எளவோ" என்று காத்திருந்தபோது, கேள் பிரண்டோடு வந்தான். அவன் வாசலுக்கு வரும்போதே, சேனலை சுட்டி டிவியிலிருந்து என்டிடிவிக்கு மாற்றினேன். அங்குதான் தொடங்கியது ஏழரை. டிவியில் ராஜ்யசபா அடிதடிக் கும்மியில் ஹமீத் அன்சாரி சிக்கியிருந்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

"என்னடா கருமம் இது. பொம்பளைங்களுக்கு எதுக்குடா இடஒதுக்கீடு" இது நானல்ல அவன்.

"..!" சர்ச்சை வேண்டாமென மௌனம் காத்தேன். "சன் நியூஸ்ல பாப்போமோ" பேச்சைத் திருப்ப முயன்றேன்.

அவன் விடுவதாக இல்லை. " பொம்பளைங்க எந்தக் காலத்துலடா நாட்ட ஒழுங்கா ஆண்டிருக்காங்க"

"..................!"    பெண்ணியவாதிகளை நினைத்து மனது படபடவென அடித்துக் கொண்டிருந்தது.

"ஏன்டா, எதாவது சொல்லுடா. உனக்கு தெரிஞ்ச பெண் அரசியல்வாதிங்க பேரெல்லாம் சொல்லு பாப்போம்"

".......................!"

" சரி நானே சொல்றேன்! இந்திரா காந்தி, பாகிஸ்தான்ல பெனாசிர், வங்கதேச ஷேக் ஹசீனாவும் அவரது எதிரி கலீதா ஜியாவும், பிலிப்பைன்ஸ்ல முன்னாள் இமெல்டாவும் இன்னாள் அரோயோவும், இங்கிலாந்து தாட்சர், இலங்கையில பண்டாரநாயகேகள், நம்மூர் ஜெயலலிதா, உ.பி. மாயாவதி, பிகார் ராப்ரி இப்படி நமக்கு ஓரளவுக்குத் தெரிஞ்ச எல்லோருமே நாட்டச் சீரழிக்கத்தான் பார்த்தாங்க. இதுல இன்னும் ஏண்டா இட ஒதுக்கீடு"


"...................!"

அவன்கூட வந்த பெண் ஆவேசமாக எழுந்தாள்.

"ஏய் என்ன ரொம்ப அடுக்கிக்கிட்டே போற. நான் இங்க இருக்கறத மறந்திட்டியா. ஜெர்மனி ஏஞ்சலா மெர்கல், சிலி பேக்லெட்டெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதோ. நீ சொன்னவங்களெல்லாம்கூட ஆம்பிளைங்களவிட கொஞ்சம் நல்லாத்தான் ஆட்சி பண்ணாங்க" சூடாகக் கொடுத்தாள்.  அவனுக்கு ஈக்வலாக இருப்பாள் போல.

"ஆமாமா நீ சொல்றது சர்தான்" வழிந்தான். நான் பொதுவாச் சொன்னேன். நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும். கரெக்ட்தான். புல்லா புரிஞ்சிடுச்சி. நாந்தான் தப்பாப் பேசிட்டேன். சாரி. நாங்க நாட்ட ஆண்டாலும் வீட்ல நீங்கதான் எஜமான். அப்படீன்னா நீங்கதான நாட்ட ஆளுறமாதிரி. இதுல இடஒதுக்கீடு வேற தேவையான்னு... அந்த டென்ட்ல சொன்னேன்" பேயடித்தது போலப் பேசினான்.

"புரிஞ்சா சரி" அவள் முகத்தைக் கோணிக்கொண்டு உட்கார்ந்தாள்.

"டேய்! லேடீஸுக்கு ரிசர்வேசன் கொடுக்க விடமாட்டாங்க போலிருக்கே" பல்டியடித்தான்.

"ஆமாடா. யாரோ நாலஞ்சு பேரு மட்டும்தான பிரச்னை பண்றாங்க. அவங்கள வெளிய தூக்கிப் போட்டுட்டு வேலையப் பாக்க வேண்டியதுதான" இப்பதான் எனக்கு வாய் திறந்தது.

"இந்த கவர்மெண்டு வேணும்னே இத வேடிக்கை பாக்கறாங்க போலடா"

"தெரியலடா"

"அந்தக் கட்சிக்காரன் சொன்னான்டா. வலியப் போயி ஆதரவு குடுத்தும், காலைலேருந்து அந்தக்கட்சிக்காரன் ஒருத்தனும் எங்களுக்கு போன் பண்ணலன்னு சொன்னான்டா. ஏதோ உள்குத்து இருக்கும்போல" 

"தெரியலடா"

"எல்லாரும் கூட்டுச் சேர்ந்து பண்றாங்க போலடா"

அப்போ அவள் குறுக்கிட்டாள்.

"அய்யா ரொம்ப யோசிக்காதீங்க. எப்படியும் நடக்கப்போறதில்ல. அப்படியே தந்தாலும்  இதென்ன வேலை வாய்ப்பிலயும் படிப்பிலயுமா கொடுக்கறாங்க. அரசியல்ல. இதனால என்ன ஆகப்போகுது. ஏற்கெனவே அரசியல்ல இருக்கற ஆம்பிளைங்கதான் பொண்டாட்டி புள்ளைங்கள பொம்மைகளா வெச்சு பயன்படுத்திக் போறாங்க.  அது இன்னும அசிங்கம். நாங்க சுயம்பாவே வந்துக்கறோம்."

"சர்தான்..!"

"சர்தான்..!"


.
..

1 comment:

ராமலக்ஷ்மி said...

//அப்படியே தந்தாலும் இதென்ன வேலை வாய்ப்பிலயும் படிப்பிலயுமா கொடுக்கறாங்க.//

நல்ல கேள்வி.

//நாங்க சுயம்பாவே வந்துக்கறோம்.//

//"சர்தான்..!"

"சர்தான்..!"//

சர்தான்:)!