Monday, March 08, 2010

தகவல் வேணுமாம்ல... தகவலு!

தகவல் சட்டம்: மக்களுக்கு நல்லதா?

எவ்வளவு ஜாலியாக இருந்தது அந்தக் காலம், எங்களமாதிரி அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும். இப்ப அப்படியா? நின்னது, நடந்தது, பிரெஞ்சு லீவு போட்டு மப்புல கிடந்ததையெல்லாம் ஒன்சைடு பேப்பர்ல எழுதித் தகவல்னு கேட்டுர்றாங்க. இவங்களுக்குப் பதில் சொல்லியே பேக்ல பலருக்குக் கொட்டிப்போச்சு. சொந்தக்காரனுக்கு வேலை போட்டுக் கொடுத்தாலும், வீடு வாங்கிக் கொடுத்தாலும் விலாவாரியாத் தெரிஞ்சு போகுது. நாடு இப்படிப் போனா, அரசியல்வாதியாவோ அதிகாரியாவோ இருந்து என்ன புண்ணியம்? படுத்தறாங்களே..!

மக்களுக்கு இது நல்லதாய்யா? சொல்லுங்கய்யா! குளம் வெட்டின கணக்கக் கேட்டு பெரிசு ஒன்னு மனுப்போட்டுது. அத்தோட போயிருக்கலாம்ல. குளத்தப் பாக்கணுமாம். ஊர் புல்லாத் தேடி... குளத்தையே காணாமா மாரடைப்பு வந்து தர்மாஸ்பத்திரில செத்துப் போச்சு.. இத மாதிரி அமைச்சர் சொத்து விவரம் வேணும்னு மதுரக்காரி ஒருத்தி மனுப்போட்டா. நாங்க அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது மீறியும் கேட்டா கையக்கால வாங்கிடுவோம்னு அடக்க ஒடுக்கமா பதில் சொன்னோம். இதவிட அஹிம்சையா எப்படிய்யா நடந்துக்கறது. அவ இதையெல்லாம் கேக்காமா கோர்ட்டுக்குப் போனா. எல்லாம் படிச்ச திமிர். போ... யார் வேண்டாம்னா. இப்ப என்னாச்சு உசிரு போச்சுல்லா. எல்லாத்துக்கும் இந்தச் சட்டம்தான காரணம். இப்பச் சொல்லுங்கய்யா மக்களுக்கு இது நல்லதாய்யா?


இன்னொருத்தன் ரொம்ப விவரமா, ஹவுசிங் போர்டுல எந்தெந்தவீடு அரசியல்வாதிக்கு கொடுத்திருங்கான்னு கேட்டான். முட்டாப்பய. என்னிக்காவது ஹவுசிங் போர்டுல உன்னமாதிரி ஆளுங்களுக்கு வீடு கொடுத்திருக்காங்களா? அப்புறம் என்னடா கேள்வி.  எல்லாவீடும் அரசியல்வாதிகளுக்குத்தான். என்ன பண்ணுவ. லைட்டா மண்ணு லாரிய விட்டு உரசிப் பாத்தோம். கால் ஒடிஞ்சதோட தப்பிச்சிட்டான். சரி இது ஏன் நடந்தது யார் செஞ்சிருப்பான்னு யோசிக்கணுமா இல்லியா. அந்த மரமண்டைல ஏறல. மண்ணு லாரியக் கொண்டு உங்க மாமன் மச்சானா விளையாடுவான். புரிஞ்சிக்கோடான்னு வீட்டுலேயே போய் சொல்லிப் பாத்தோம். கடைசில வேற வழியில்லாமா அவன் குடியிருந்த வீட்டயே வெளிவட்டச் செயலாளரோட அந்தரங்கச் செயலாளர் பேர்ல நாங்களே பத்திரம் தயாரிச்சிட்டோம். இப்ப அவன் வீட்டக் கேட்டு கோர்ட்டுல கெடக்கான். பொதுவா நாங்கள்லாம் நல்லவங்கதான். இப்படி அநியாயமாச் சீண்டினாத்தான் கோவம் வந்து போட்ருவோம்.


இந்தத் தகவல் சட்டத்தால பல பேரோடு உசிரு போயிருக்கு. பலர் நடுத்தெருவுக்கு வந்திருக்காங்க. வேலை பறிகொடுத்திருக்காங்க. சிலர் சாப்பாட்டுக்கே வழியில்லாமா ஆகியிருக்காங்க. இப்படிப்பட்ட ஒரு சட்டம் நல்லதாய்யா. நீங்களே யோசிங்கய்யா.

தகவல் சட்டத்தால பேப்பர் பேனா விலைஏறினது, டிடிபி சென்டர்ல பிரிண்டவுட் எடுக்க மதிய சோத்தக் கட்டிக்கிட்டுப் போயி வரிசையில நிக்கறது, டிடி கமிஷனுக்கே பெர்சனல் லோன் போட்டதுதாங்க நடந்திருக்கு. வேற உருப்படியா ஒன்னக் காட்டுங்க பாப்போம். இல்ல உருப்படியா ஒன்னு கெடச்சிருமா. நாங்க குடுத்திருவமா. அப்புறம் எதுக்குய்யா இந்தச் சட்டம்.

எங்களக் கேட்டா இந்தச் சட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானதுங்கய்யா . காத பக்கத்துல கொண்டுவாங்கய்யா... பாகிஸ்தான்காரங்க நம்ம நாட்டுத் தகவலையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நம்மேல போர் தொடுத்தா என்னய்யா பண்ணுவீங்க. ஆங்....இப்ப புரியுதா... நாங்க ஏன் தகவலத் தரமாட்டோங்கறது.... எல்லாம் நாட்டுப் பற்றுய்யா... நாட்டுப் பற்று....தகவல் வேணுமாம்ல. தகவலு...

...

..

3 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

பகிர்வுக்கு நன்றி

வரதராஜலு .பூ said...

அதானே, தேவையா இவங்களுக்கு இந்த தகவலு?

நல்லா கேக்கறாய்ங்கப்பா டீடெய்லு

:-)
:-(

புளியங்குடி said...

:-)
:-(