Thursday, January 28, 2010

இன்னொரு "பசுமைப் புரட்சி" சதி

பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவர் என்பதால் அவரைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. அவர் வீட்டு நாய்க்குட்டிக்கு கூட மரியாதை கொடுக்க வேண்டும். மரபுக்கு விரோதம் என்பார்கள். ஆனால் அவர் பேசியதைப் பற்றி எழுதலாம்.

பசுமைப் புரட்சி என்கிற ஆங்கிலேயச் சதி இந்திய அரசியல்வாதிகளாலும் இன்றைக்கும் சமூகத்தில் பெரிய சாதனையாளராகக் கருதப்படும் ஒரு விஞ்ஞானியாலும் இந்தியாவில் அரங்கேற்றப்பட்டது என்பது பழைய சங்கதி. அப்போது கூறப்பட்ட காரணம் நாட்டில் உணவுப் பொருள் இல்லையென்பது. இப்போதும் அதுபோலவே நிலைமை மாறிவிட்டதால், இன்னொரு பசுமைப் புரட்சியை நடத்திவிட ஒரு கூட்டம் தயாராகிவிட்டது.

ஒவ்வொருத்தராகப் பேசிவந்த இரண்டாம் பசுமைப் புரட்சி என்கிற மயக்கும் சொற்கள், கடைசியாக நாட்டின் குடியரசுத் தலைவரின் வாய்வழியாகவே வரவைக்கப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவரின் பேச்சுக்கு நாடெங்கும் பலத்த வரவேற்பு. பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன.

முதலாவது பசுமைப் புரட்சியால் இந்தியாவுக்குள் நுழைந்த உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்ற வியாபாரத் தந்திரங்களையே இன்னும் நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று மக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றி எதையெதையோ விற்றார்கள். இப்போது விவசாயிகள் கம்பெனிகளையும் கடன்காரர்களையும் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இப்போது இரண்டாவது பசுமைப் புரட்சி. இதற்கு ஏன் அவசரம்? காரணம் இருக்கிறது. இப்போதுதான் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டுக்குள் நுழையத் தொடங்கியிருக்கின்றன. இதை முடிந்த வரை விற்பதற்குத்தான் இந்த இரண்டாவது பசுமைப் புரட்சி சதி.

ஜிஎம் விதைகளை  விற்பதற்கு பலவகையிலும் முயன்றுவரும் கார்ப்பரேட் இந்திய அரசின் புதுவிதமான அணுகுமுறைதான் இது. முதலில் பி.டி. கத்தரிக்காய். அப்புறம் பி.டி.விவசாயம்.

......
.
.

2 comments:

நேசமித்ரன். said...

:)

நல்ல இடுகை

துபாய் ராஜா said...

வருங்காலத்தை நினைத்தால் வருத்தமாக மட்டுமில்லை, பயமாகவும் இருக்கிறது. :(