Wednesday, February 03, 2010

ஏமனைக் குறிவைக்கும் அமெரிக்கா

கிறிஸ் து​மஸ் நாளன்று அமெ​ரிக்க விமா​னத்​தைக் குண்டு வைத்​துத் தகர்க்க நடந்த முயற்சி முறி​ய​டிக்​கப்​பட்​டது.​ குண்டு வைத்​தா​கக் கரு​தப்​ப​டும் இளை​ஞ​ரைப் பிடித்து விசா​ரித்​த​தில்,​​ ஏம​னில் இருந்​து​தான் தனக்கு வெடி​பொ​ருள் வழங்​கப்​பட்​ட​தா​கத் தெரி​வித்​தார்.​ உலகை உலுக்​கிய இந்​தச் சதி​யில் தனக்கு இருக்​கும் தொடர்பை அல்-​காய்தா இயக்​க​மும் ஒப்​புக்​கொண்​டி​ருப்​ப​தால் மேற்​கத்​திய நாடு​க​ளின் பார்வை இப்​போது ஏமன் மீது திரும்​பி​யி​ருக்​கி​றது.​

அ​ரபு நாடு​க​ளி​லேயே மிக​வும் ஏழ்​மை​யான ஏமன்,​​ பொரு​ளா​தார நிலை​யில் மிக​வும் பின்​தங்​கி​யி​ருக்​கி​றது.​ உள்​கட்​ட​மைப்​பும்,​​ வளங்​க​ளும் தேவைக்​கேற்ப இல்லை.​ ஆப்​பி​ரிக்​கா​வி​லுள்ள பின்​தங்​கிய நாடு​க​ளைப் போன்றே வறு​மை​யால் வலு​வி​ழந்து போயி​ருக்​கி​றது ஏமன்.​ அரே​பிய தீப​கற்​பத்​தில் பொது​வா​கக் கிடைக்​கும் பெட்​ரோ​லிய வள​மும்,​​ ஏமனை ஏமாற்​றிக் கொண்​டி​ருக்​கி​றது.​ இத்​து​டன் பக்​கத்தி​லி​ருக்​கும் பொரு​ளா​தார வல்​ல​ர​சான சவூதி அரே​பி​யா​வைப் பகைத்​துக் கொண்​டி​ருப்​ப​தால் ஏற்​பட்​டி​ருக்​கும் இழப்​பு​கள் வேறு.​ ​

இ​ தைத்​த​விர,​​ 20 ஆண்​டு​க​ளில் இரட்​டிப்​பா​கும் மக்​கள்​தொகை,​​ 40 சத​வீத வேலை​வாய்ப்​பின்மை,​​ தனி​ந​பர் வரு​மா​னத்​தில் 175-வது இடம்,​​ 50 சத​வீ​தக் கல்​வி​ய​றிவு என தோல்வி அடைந்து,​​ அண்​டை​நா​டான சோமா​லியா போல் ஆவ​தற்​கான எல்​லாத் தகு​தி​க​ளும் ஏம​னுக்கு இருக்​கின்​றன.​ ஆனா​லும் தோல்வி அடைந்த நாடு​க​ளின் பட்​டிய​லில் ஏமன் இன்​னும் சேர்ந்​து​வி​ட​வில்லை.​

இ​ராக்​கில் இருப்​ப​தைப் போன்ற மதப் பிரி​வு​கள் ஏம​னி​லும் இருக்​கின்​றன.​ கிட்​டத்​தட்ட சரி​பாதி அள​வுக்கு இருக்​கும் இந்த இரு பிரி​வு​க​ளுக்கு இடையே மிக அண்​மை​யில் கூட கடு​மை​யான மோதல் நடந்​தி​ருக்​கி​றது.​ இ​ராக்​கைப் போன்று இரு பிரி​வு​க​ளுக்​கும் மிக வலு​வான பிளவு இல்லை என்​றா​லும்,​​ நாட்​டின் சம​நி​லைக்கு இந்​தப் பிளவு பெரிய அச்​சு​றுத்​தல்​தான்.​ சவூதி அரே​பி​யாவை ஒட்​டி​யுள்ள பகு​தி​க​ளில் ஷியா பிரி​வி​னர் நடத்தி வரும் கல​க​மும் ஏம​னுக்​குப் பெரிய தலைவ​லி​யா​கத் தொடர்​கி​றது.​

ஆப்​கா​ னிஸ்​தா​னு​ட​னும்,​​ பாகிஸ்​தா​னின் வட​மேற்​குப் பகு​தி​யு​ட​னும் ஏமனை ஒப்​பிட முடி​யும்.​ அங்​கெல்​லாம் எப்​படி மத்​திய அர​சின் ஆட்​சிக்கு வாய்ப்​பில்​லா​மல் உள்​ளூர் மதத் தலை​வர்​க​ளின் கெடு​பிடி அர​சி​யல் நடக்​கி​றதோ,​​ அதைப் போன்​ற​தொரு நிலை​தான் ஏம​னின் பெரும்​பான்​மை​யான பகு​தி​க​ளில் நடக்​கி​றது.​

  அல்-​காய்தா போன்ற பயங்​க​ர​வாத அமைப்​பு​கள் தங்​க​ளது நட​வ​டிக்​கை​களை ஏம​னில் வலுப்​ப​டுத்​தி​யி​ருப்​ப​தற்​கும் இது​தான் முக்​கி​யக் கார​ணம்.​ ​

பின் ​தங்​கிய நாடு​க​ளுக்​கே​யு​ரிய நிர்​வா​கச் சீர்​கே​டு​க​ளும் ஊழ​லும் ஏம​னில் மலிந்​தி​ருக்​கின்​றன.​ இதற்​குச் சிறந்த உதா​ர​ணம் டீசல் ஊழல்.​ பெட்​ரோ​லி​யத்தை ஏற்​று​மதி செய்​யும் ஏமன்,​​ டீசலை இறக்​கு​மதி செய்ய வேண்​டிய நிலை​யில்​தான் இருக்​கி​றது.​ மின் தயா​ரிப்​புக்கு டீசலை மட்​டுமே நம்​பி​யி​ருப்​ப​தால்,​​ இந்த இறக்​கு​ம​தி​யைத் தவிர்க்​க​வும் வழி​யில்லை.​ ​

இ​த​னால்,​​ உல​கச் சந்​தை​யில் அதிக விலைக்கு டீசலை வாங்​கும் அரசு,​​ மானிய விலை​யில் மின் தயா​ரிப்பு நிறு​வ​னங்​க​ளுக்​கும்,​​ சில தனி​யா​ருக்​கும் விற்​கி​றது.​ இதில் நுழை​யும் மூத்த அதி​கா​ரி​கள்,​​ மானிய விலை​யில் கிடைக்​கும் டீசலை,​​ கிட்​டத்​தட்ட உல​கச் சந்தை விலைக்கே வெளி​நா​டு​க​ளுக்கு கடத்தி விற்​றுக் கொள்ளை அடிக்​கின்​ற​னர்.​ இப்​ப​டிப் பல நிலை​க​ளி​லும் ஏமன் சீர்​தி​ருத்​தப்​பட வேண்​டி​யி​ருக்​கி​றது.​

கி​றிஸ்​து​மஸ் நாள் சம்​ப​வத்​துக்​குப் பிறகு,​​ பயங்​க​ர​வா​தத்​தின் இருப்​பி​ட​மாக மாறு​வ​தற்கு வாய்ப்​புள்ள இட​மாக இப்​போது உலக நாடு​கள் ஏம​னைக் கரு​தத் தொடங்​கி​யி​ருக்​கின்​றன.​ இராக்,​​ ஆப்​கா​னிஸ்​தான் போன்ற நாடு​க​ளுக்​குள் மேற்​கத்​தி​யப் படை​கள் நுழை​யும்​போது ஏற்​பட்​டி​ருந்த நிலையே இப்​போ​தும் இருப்​ப​தால்,​​ ஏமன் கலங்​கிப் போயி​ருக்​கி​றது.​ தனது ராணு​வத்​தைக் கொண்டு பயங்​க​ர​வா​தி​களை ஒடுக்​கும் பணி​யைத் தொடங்​கி​யி​ருக்​கி​றது.​ ஆனா​லும் ஆப்​க​னுக்​கும் இராக்​குக்​கும் நேர்ந்​தது,​​ ஏமனை எட்​டு​வ​தற்​கான அச்​சு​றுத்​தல் இப்​போது நீங்​கி​வி​ட​வில்லை.​

  ஆப்​கன் விவ​கா​ரம் தொடர்​பாக லண்​ட​னில் நடந்த மேற்​கத்​திய நாடு​கள் நடத்​திய மாநாட்​டின்​போது,​​ ஏம​னுக்​கென்​றும் தனி​யாக ஒரு சிறிய மாநாடு நடத்​தப்​பட்​டதே இதற்கு சாட்சி.​

ஏ​ம​னின் கலக்​கத்​துக்கு இன்​னொரு கார​ண​மும் உண்டு.​ 1991-ம் ஆண்​டில் சதாம் ஹு​சைன் குவைத்தை ஆக்​கி​ர​மித்​த​போது,​​ அவ​ருக்கு ஆத​ர​வாக இருந்த ஒரே அரபு நாடு ஏமன்​தான்.​ இத​னால்,​​ மற்ற வளை​குடா நாடு​க​ளில் இருந்த ஏம​னைச் சேர்ந்​த​வர்​கள் அனை​வ​ரும் விரட்​டி​ய​டிக்​கப்​பட்​ட​னர்.​

   சதாம் ஹு​சைன் இருக்​கும்​வ​ரை​யில் இது​போன்ற சிக்​கல்​க​ளை​யெல்​லாம் சமா​ளித்​துக் கொள்​ள​லாம் என்​கிற எண்​ணத்​தில் இருந்த ஏம​னுக்கு,​​ இராக்​கின் தோல்வி பெரிய பின்​ன​டை​வாக அமைந்​து​விட்​டது.​

ச​தாம் ஹு​சை​னுக்கு ஆத​ர​வ​ளித்​தது,​​ மற்ற அர​பு​நா​டு​க​ளு​டன் பகை,​​ சட்ட ஒழுங்​கற்ற சோமா​லி​யா​வு​டன் நிபந்​த​னை​யற்ற நட்பு,​​ பொரு​ளா​தா​ரச் சீர​ழிவு,​​ உள்​நாட்​டுக் கசப்பு போன்​ற​வற்​று​டன் இப்​போது அல்-​காய்​தா​வின் இருப்​பி​ட​மென்​ப​தும் உறுதி செய்​யப்​பட்​டு​விட்​ட​தால்,​​ ஏம​னுக்கு ஆபத்து அதி​க​மா​கி​யி​ருக்​கி​றது.​

  மக்​க​ளைக் காக்க வேண்​டு​மென்​றால்,​​ மேற்​கத்​திய விருப்​பத்​துக்கு ஏற்ப நடந்து கொள்​வ​தைத் தவிர ஏமன் ஆட்​சி​யா​ளர்​க​ளுக்கு வேறு வழி​யில்லை என்​ப​து​தான் வேதனை.​

No comments: