Friday, February 19, 2010

அத்து மீற வேண்டாம் செந்தழல் ரவி! கவனியுங்கள் தமிழ்நதி!

ஈழத்தமிழர்கள் எவ்வளவு தாக்கினாலும் என்போன்றோருக்கு வெறுப்போ எரிச்சலோ வருவதில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீது ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கும் கோபம் நிரந்தரமானதல்ல என்ற நம்பிக்கை இன்னும் என்போன்றோருக்கு இருப்பதுதான் அதற்குக் காரணம். ஈழத்துக்காரர்களின் கோபம் எத்தகைய நியாயமானது என்பதை என்போன்றோர் புரிந்து கொள்கிறோம். ஆனால், தமிழ்நாட்டுக்காரர் அனைவரும் எல்லோரும் என்போன்றோரல்லவே.

போராட்டம் வலுப்பெற வேண்டுமானால் அது மனிதர்களை நோக்கிச் செல்வதாக இருக்க வேண்டும், ஆதரவைப் பெருக்கிக்கொள்ள அரவணைத்துச் செல்லுதல் அவசியம் என்பன போன்ற அடிப்படைகளைக்கூட ஈழத்தின் அடுத்த தலைமுறைக்காரர்கள் புரிந்து கொள்ள இன்னும் காலம் தேவைப்படும் போலிருக்கிறது. எல்லோரையும் பகைத்துக் கொண்டால் ஈழப் போராட்டம் அடுத்த நிலை நோக்கிச் செல்வதெப்படி? சேகுவேரா, சைமன் பொலிவர், மார்ட்டின் லூதர் கிங், காந்திஜி ஆகியோரெல்லாம் என்ன செய்தார்கள் என்று நாம் படித்திருக்கிறோம்தானே? அல்லது போராட்டம் முடிந்துவிட்டது இனியொன்றுமில்லை என்கிற முடிவுக்கு ஈழத்துக்காரர்களில் பலர் வந்துவிட்டார்களா என்றும் தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை, துரோகிகள் என்று ஒட்டுமொத்தமாக எவ்வளவு தாக்கினாலும் அதையும் தாண்டி ஈழப்போராட்டங்களை ஆதரிக்கும் பெருங்கூட்டம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவை அழிப்பேன் தமிழ்நாட்டைத் தகர்ப்பேன் என்று கூறுவது இந்தக் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திக் கலைக்கும் என்பதை ஈழத்துக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையிலேயே "ஈழத்தில் இருக்கும்" தமிழர்கள் மீது அக்கறையிருந்தால் கொஞ்ச காலத்துக்கு இந்த மாதிரியான பேச்சுக்களைக் குறைக்கலாம். நமது குடும்பங்கள் எதிரியிடம் சிக்கியிருக்கும்போது ஆவேசப் பேச்சுக்கள் எந்த வகையில் பலனளிக்கும்?

------------

தமிழ்நதியைத் தனிப்பட்ட முறையில் தாக்கி தரக்குறைவாக எழுதப்பட்டிருந்த பதிவைச் சுட்டிக்காட்டிக் குறைபட்டு இந்த வலைப்பூவில் ஒரு பதிவை எழுதினேன். இதே போன்றதொரு சிந்தனை செந்தழல் ரவியின் வலைப்பூவிலும் எழுதப்பட்டிருப்பதாக நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். போய்ப் படித்துவிட்டு வந்துதான் இதை எழுதுகிறேன்.

குறிப்பிட்ட அந்த இடுகை தமிழ்நதியைத் தாக்கி எழுதியிருந்த அந்தப் பதிவைக் காட்டிலும் மிக மோசமான தனிநபர் விமர்சனத்தில் ஆர்வங்காட்டுவதாக அமைந்திருந்தது. புதிதாக எழுத வந்திருக்கும் பெண்பதிவரை நாகரீகமற்ற முறையில் தாக்குவது சரியானதாக இருக்காது என்பது எனது கருத்து. தமிழ்நதி போன்றோரும் செந்தமிழ் ரவியின் பதிவை ஊக்கப்படுத்த மாட்டார்கள் என நம்புகிறேன்.

டாக்டர். ருத்ரன் கூறியது போல வெறும் நகைச்சுவைக்காக அந்தப் பெண் பதிவர் தமிழ்நதியைத் தாக்கி எழுதினார் என்று நான் கருதவில்லை. ஆனால் ருத்ரன் கூறியதற்கு கிட்டதட்ட ஒத்திருக்கும் மனநிலையில் அவர் இருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். அதனால்தான் குழந்தைத்தனமான தாக்கு என்று எழுதினேன். இது எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடியதா என்று எனக்குத் தெரியாது.

ஆனால் கூட்ட நெரிசலில் காலை மிதித்துவிட்டதற்காக மரணதண்டனை விதிப்பது நீதியாகாதே!

-------------

இந்த வலைப்பூவில் பின்னூட்டுகள் அனைத்தும் தானாகவே பிரசுரமாகும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. தயவு செய்து கவனமாக எழுதவும்.
..

..
.

3 comments:

பத்மநாபன் said...

//உண்மையிலேயே "ஈழத்தில் இருக்கும்" தமிழர்கள் மீது அக்கறையிருந்தால் கொஞ்ச காலத்துக்கு இந்த மாதிரியான பேச்சுக்களைக் குறைக்கலாம்.// ரொம்ப பொறுப்பான பதிவு புளியங்குடி

Anonymous said...

test

Anonymous said...

///இந்த வலைப்பூவில் பின்னூட்டுகள் அனைத்தும் தானாகவே பிரசுரமாகும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. தயவு செய்து கவனமாக எழுதவும்.///

no, not like that.

tested,
result - negative