Friday, December 11, 2009

எனது நண்பர்கள் - 3: ஜெபஸ்டின் காசிராஜன் - எ கம்ப்ளீட் மேன்

நட்பு நீடித்திருக்க அலைவரிசை ஒத்துப்போக வேண்டுமென்பார்கள். சிலருக்கு ஓரிருவர்தான் நண்பர்களாக வாய்ப்பார்கள். பொறுமை, சகிப்புத்தன்மை, கோபம், விட்டுக் கொடுப்பது, எல்லைகளை வரையறுத்துக்கொள்வது, உதவி செய்வது, புத்திசாலித்தனம், அறிவு எனப் பல்வேறு காரணிகள் நட்புகொள்ள உதவுவதாகக் கூறப்படுகிறது. சொல்லும் மொழியும்கூட நட்பை உருவாக்குகின்றன. ஆனால் இவற்றைக் கொண்டு, அறிவாளிக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள் என்றோ, அடிக்கடி கோபம் கொள்பவருக்கு குறைவான நண்பர்கள் இருப்பார்கள் என்றோ சொற்களால் வரையறுக்க முடிவதில்லை. ஆனால், எனக்குத் தெரிந்த நட்பு கொள்வதற்கான வரையறை ஜெபஸ்டின்.

வயதில் மிகச் சிறியவரான ஜெபஸ்டினிடமிருந்து நட்புவட்டத்தை பெருக்கிக்கொள்ள விரும்புவோர் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்றே நான் நினைப்பதுண்டு. எதையோ தெரிந்துகொள்வதற்காக எனக்கு அறிமுகமாகிய ஜெபஸ்டினிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை பல உண்டு.

நட்புக்கான காரணிகளாக மேற்சொன்ன குணங்கள் கொண்ட பலதரப்பட்டவர்களையும் ஜெபஸ்டினால் நட்பு கொள்ள முடிந்திருக்கிறது. தாய்,  தந்தை, சகோதரன் போன்றவர்கள்  அமைந்ததும்கூட  இவரது  குணங்களுக்கு  காரணமாக இருக்கலாம். தற்போது பெரிய நிறுவனம் ஒன்றில் பதவியில் இருக்கும் ஜெபஸ்டின் இப்போதும் எனக்கு நண்பர் என்பதில் எனக்குப் பெருமைதான்.

புளியங்குடி புரோட்டா கடைகள், சி, சி பிளஸ் பிளஸ், ஜாவா, ஜேசிப் புராஜக்ட் என நாங்கள் பகிர்ந்துகொள்ள நிறைய இருக்கிறது.

அடுத்தது

சமூக எல்லைகளைக் கடந்தவர்: அ. செல்வதரன்

முந்தையவை:

 எனது நண்பர்கள் -2 : ஆழ்கடலின் அமைதி - எம். பாலசுப்ரமணியன்

எனது நண்பர்கள் - 1: தன்னம்பிக்கை ஏணி - என். ராஜாராமன்


2 comments:

Jebastin said...

he..he.. Thanks, actually you are my role model. Even i react, speak like you :)

you know onething, you introduced me to Puliangudi library and i read a lot.

It's been 3 year. In chennai, porur library; NO one is giving reference signature for me and i am langing for some sort of changes in library applications.

senthilkumar.s said...

Really Jebastin is good man. i am also learn more thing from him..