Monday, November 30, 2009

எனது நண்பர்கள் -2 : ஆழ்கடலின் அமைதி - எம். பாலசுப்ரமணியன்


பள்ளிக்காலத்தில் ஒரே பெஞ்சை தேய்த்தவர்கள். பட்டாம்பூச்சிப் பருவத்தில் உறவு வலுவானது. எப்படியாவது இவரது நட்புக் கிடைத்துவிடாதா என பலர் ஏங்கியிருந்தபோது, என்னை மனதில் ஒட்டிக் கொண்டவர். என்னுடைய எல்லாப் பலவீனங்களையும் நேர்மறையாகப் புரிந்துகொண்ட முதல் மனிதர். வாழ்க்கையின் பிரச்னைகளை போகிறபோக்கில் சமாளிக்கத் தெரி்ந்தவர்.

சிவகாசி கல்லூரியில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது, எங்களிருவருக்கும் இடையேயிருந்த கடிதப் போக்குவரத்தை இன்றைக்கு நினைத்தாலும் சிலிர்த்துக் கொள்ளும். மனிதர்களை நோக்கிச் செல்லும் குணம் என்னுள் எழுந்ததற்கு பாலாவின் நட்பு முக்கியக் காரணம். 

திருமணத்துக்காக அவர் செய்த புரட்சியையும் துணிச்சலையும் எண்ணி நான் எப்போதும் அதிசயித்திருக்கிறேன். ஒரு சமூகத்தின் மனப்போக்கையே தனது திருமணத்தால் மாற்றிய பெருமை பாலாவுக்கு உண்டு. பூஜ்ஜியத்திலிருந்து கோடிகளை உருவாக்கும் நுணுக்கங்கள் இவருக்குத் தெரியும். சென்னை அண்ணா நகரை ஒட்டிய பகுதிகளில் ஐ.ஏ.எஸ். பயிற்சிபெறுபவர்கள் யாரும் இவரைத் தெரியாது எனச் சொல்ல முடியாது.

ஒரே மாதத்தில் 30 இரண்டாம் ஆட்டங்கள், வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட், பெங்களூர் ரயில் பயணம் என மறக்க முடியாத தருணங்கள் நிறைய இருக்கின்றன. அவரது திருமணத்தில் கலந்து கொள்ளாதது போன்ற குற்ற உணர்ச்சிக்கு என்னை ஆளாக்கும் சம்பவங்களும் சில இருக்கின்றன.


அடுத்தது:

எ கம்ப்ளீட் மேன் : ஜெபஸ்டின் காசிராஜன்.


 முந்தையது:


எனது நண்பர்கள் - 1: தன்னம்பிக்கை ஏணி - என். ராஜாராமன்


--------

No comments: