Tuesday, November 17, 2009

பத்திரிகையாளர்களிடம் கெஞ்சுகிறார் விவேக்!


தினமலர் பத்திரிகையில் வந்த செய்தியால் நடிகைகள் மீது ஏற்பட்ட கறையைத் துடைப்பதற்காக நடந்த கண்டனக் கூட்டத்தில் சில நடிகர்கள் சினிமாவில் நடிப்பதுபோலவே ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டார்கள். பத்திரிகையாளர்களை பிரியாணிக்கும் குவார்ட்டருக்கும் அலைபவர்கள் எனவும் பேசினார் குட்டைக் கலைவாணர். அவரைப் பற்றி செய்தி வந்தால் பிரசுரிக்கக்கூடாது எனவும், ஏதாவது செய்தியென்றால் நெகடிவாக எழுதுவதெனவும் பல பத்திரிகைகள் முடிவெடுத்துவிட்டன. ஏற்கெனவே வடிவேலுவின் அதிரடியில் மார்க்கெட் போயிருக்கும் விவேக்குக்கு இந்த விவகாரம் இன்னும் பீதியைக் கிளப்பியது. பார்த்தார், பேசாமல் பத்திரிகையாளர்கள் காலில் விழுந்துவிடுவது என முடிவெடுத்து கடிதம் எழுதியிருக்கிறார். இதோ அந்தக் கடிதம்... ஈனப்பசங்க என்று பேசிய நடிகர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.





No comments: