Sunday, November 29, 2009

ஸ்விட்சர்லாந்தில் மசூதி கோபுரங்களுக்குத் தடை?


அமைதியான நாடு என்று இதுவரை அழைக்கப்பட்டு வரும் ஸ்விட்சர்லாந்து, இப்போது பெரும் சிக்கலில் சிக்கியிருக்கிறது. மசூதிகளில் மினார்களைக் கட்டத் தடை விதிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கையையடுத்து, இன்று ஃரெபரண்டம் எனப்படும் கருத்துத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தடை விதிப்பதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.

இனி முஸ்லிம் உலகத்துடன் ஸ்விட்சர்லாந்து முறுக்கிக் கொள்ள வேண்டியதுதான். முஸ்லிம் நாடுகளிலுள்ள தனது கடைகளை ஸ்விஸ் நாடு மூடிக் கொள்ள வேண்டும். தன் தலையிலேயே தீயைக் கொட்டிக் கொண்டதுபோல, ஸ்விஸ் மக்கள் வன்முறையை வலிந்து சென்று அழைத்திருக்கிறார்கள். இனி அரசியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் கொண்டாட்டம்தான். ஐரோப்பா ஒரு பெரிய நெருக்கடிக்குத் தயாராகி வருகிறது.

(இது வெறும் செய்திதான். விரிவான கட்டுரை விரைவில்)

No comments: