Wednesday, November 08, 2006

நிறம் மாறும் கம்யூனிஸ்ட்டுகள்

இந்திய கம்யூனிஸ்ட்டும், மார்க்சிஸ்ட்டும் இந்தியாவில் கடந்து வந்த பாதை மிகவும் போராட்டம் மிகுந்ததாகவே இருந்து வந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் பிரிவில் கம்ப்ய+னிஸ்ட்டுகளுக்கு தீவிரவாத முத்திரையும் உண்டு. மக்கள் போராட்டங்களில் கம்ய+னிசம் வளர்ந்தது என்றே சொல்லலாம். எனினும் சமீப காலங்களில் அவர்களது செயல்பாடுகள் சந்தர்ப்ப வசப்பட்டதாக அமைந்திருக்கிறது. பாரதீய ஜனதா மதவாத அரசியல் நடத்துவதால், காங்கிரசை அரியணை ஏற்றிய போது உண்மையிலேயே அவர்கள் தங்கள் பாதையில் சற்றே விலகினார்கள் என்பதை மறுக்க முடியாது. பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்திய போது தங்களது கருத்தை கூட்டணிக் கட்சிகளுக்கு ஆணித்தரமாக தெரிவிக்காமல், மத்திய அரசை எதிர்த்து பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தியது அபத்தம். இதே மாதிரியான ஒரு சூழல் தான் கங்கைகொண்டானில் குளிர்பானக் கம்பெனியை அனுமதித்ததற்காக மாநில அரசை எதிர்த்து போராட்டம் நடத்தியபோதும் நிலவியது. இந்தப் போராட்டத்தில் எங்குமே மத்திய அரசு மீது குறை கூற முடியாத ஒரு தர்மசங்கடம் அவர்களுக்கு ஏற்பட்டது. சமீபத்தில் கம்ய+னிஸ்ட்டுகள் ஆளும் மேற்குவங்கத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தால் மாநிலமே ஸ்தம்பித்துப் போனது. உடனே அரசு, வேலை நிறுத்த உரிமை அத்துறைக்கு கிடையாது என்று அறிக்கை வெளியிட்டது. இதில் அரசுக்கும் சிஐடியு தொழிற்சங்கத்திற்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. இதே போன்ற தெளிவில்லாத தர்மசங்கடமான நிலையைத்தான் தற்போதைய கம்ய+னிஸ்ட்டுகள் கொண்டுள்ளது. இதில் அரசியல் ரீதியாக அவர்களுக்கு வெற்றி கிடைத்தாலும் அவர்களது கொள்கைகளில் கொஞ்சம் வலதுசாரி வாசனை வீசுவதை யாராலும் மறுக்க இயலாது

No comments: