Wednesday, November 08, 2006

மதிக்கப்பட வேண்டிய தைவான்

அரை நூற்றாண்டின் மக்களின் அயராத உழைப்பினால் இன்று தைவான் பொருளாதார பலம் மிக்க நாடாக உயர்ந்திருக்கிறது. சீனாவுடன் உறவு பாதிக்கப் பட்டிருப்பதால், தைவானை தனி நாடாக அங்கீகரிக்க சீனா மறுக்கிறது. மேலும், தைவானுடன் ராஜீய உறவுகள் வைத்துக் கொள்ளும் எந்த நாட்டுடனும் உறவு வைத்துக் கொள்ள சீனா மறுக்கிறது. இதன் காரணமாகவே, ஐரோப்பிய நாடுகளும், இந்தியா போன்ற ஆசிய நாடுகளும் வர்த்தக பலம் மிக்க சீனாவுடன் ராஜீய, வர்த்தக உறவுகள் வைத்துக் கொள்வதை விரும்பி, தைவானைப் புறக்கணிக்கின்றன. உலகின் மிகச்சிறிய தென்னமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் 26 மட்டுமே தைவானை அங்கீகரித்திருக்கின்றன. ஐ.நா. சபையிலிருந்து 1971ல் தைவான் வெளியேற்றப்பட்ட பிறகு, அதை உறுப்பினராக்குவதில் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. உலகில் மக்களாட்சி முறையாக நடைபெற்று வரும் ஒரு நாட்டிற்கு ஐ.நா. சபையில் உறுப்பினராக அனுமதி மறுக்கப்படுவது, ஐ.நா. வின் சமதர்ம கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. சீனாவும் தனது சர்வாதிகாரப் போக்கிலிருந்து விலகி வந்து தைவான் ஓர் நட்பு நாடாக அங்கீகரித்து அங்கு வாழும் 2¼ கோடி மக்களையும் உலக சமூகத்துடன் இணைக்க வேண்டும். அப்போதுதான் அங்கு சமநிலை தோன்றி தீவிரவாதம் அற்ற சூழல் மலரும்.

No comments: