Wednesday, November 08, 2006

மறுக்கப்படும் வரலாற்று நிகழ்வுகள்

காலம் காலமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரலாற்றில் எழுதப்பட்ட ஒரு நிகழ்வை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதனை மறுபார்வை செய்வதன் மூலமாக அதில் திருத்தங்களை செய்வதும் அல்லது முற்றிலுமாக மாற்றி எழுதுவதும் வரலாற்று ஆராய்ச்சிப் படிப்பின் மிக முக்கியமான பகுதிகளாகும். இதுவரையில் கிடைக்கப்பெறாத புதிய ஆவணங்களை கண்டறிவதன் மூலமாகவும் மிகத் துல்லியமான விபரங்களைச் சேகரிப்பதன் மூலமாகவும் மட்டுமே வரலாற்றில் மீள்பார்வை செய்ய முடியும். வரலாற்று ஆசிரியர் டேவிட் இர்விங் கூற்றுப்படி, "வரலாறு என்பது தொடர்ச்சியாக வளர்ந்து வரும் மரமாகும். ஒவ்வொரு புதிதாக கிடைக்கும் ஆவணங்களின் மூலமாகவும் வரலாறு மாறிக் கொண்டே இருக்கும்". உதாரணமாக சமீபத்தில் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட ஓர் உலக வரைபடத்தின் மூலமாக கொலம்பஸ் காலத்திற்கு முன்னரே சீனர்கள் அமெரிக்க கண்டத்தை கண்டறிந்திருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மை தெரிய வருகிறது.
ஆனால், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஹிட்லர் தலைமையிலான நாசி ஜெர்மனியால் ஐம்பது லட்சம் ய+தர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற வரலாற்று நிகழ்வை மறுத்துப் பேசுவது பல ஐரோப்பிய நாடுகளில் குற்றமாக கருதப்படுகிறது. 1938 முதல் 1945ல் இரண்டாம் உலகப்போர் முடியும் வரை விஷவாயு நிரப்பப்பட்ட அறைகளில் அடைக்கப்பட்டு லட்சக்கணக்காக ய+தர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தப் படுகொலைகளைச் செய்வதற்காக ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு ஜன்னல்கள் மற்றும் காற்றோட்ட வசதி செய்யப்படாத நிறைய அறைகள் கட்டப்பட்டு அதில் சிறைப்பிடிக்கப்பட்ட ய+தர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த அறைகளின் கதவுகளில் சிறிய துவாரமிடப்பட்டிருந்தது. அதன் வழியாகவே விஷவாயுக்கள் செலுத்தப்பட்டு அனைவரும் மொத்தம் மொத்தமாகக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகளின் கோரமுகம் 1941ல் தான் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது. சிறைகளில் இருந்து தப்பிய சிலரது தெளிவான விளக்கங்களின் மூலமாகவே இந்த வரலாற்று நிகழ்வின் உண்மைத் தன்மை மேலும் அதிகரித்தது. போர் முடியும் தருவாயில் ஜெர்மனியின் சில இனப்படுகொலை முகாம்களுக்குள் நுழைந்த பிரிட்டிஷ் படைகள் அங்கு ஆயிரக்கணக்கான எரிக்கப்படாத பிணங்களையும், உணவில்லாமல் எலும்பும் தோலுமாக காட்சியளித்த பலரையும் மீட்டது. அங்கு மீட்கப்பட்ட சில ஆவணங்கள் மற்றும் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இந்த பேரினப் படுகொலைகளுக்கு தவிர்க்க முடியாத ஆதாரமாக உள்ளது. ஆன்ஃபிராங் என்ற ய+த இளம் பெண்; தனது டைரியில், அவரும் அவரது குடும்பமும் நாசிக்களால் பட்ட இன்னல்களை விவரிக்கிறார். இந்த டைரி தான் நாஸி ஜெர்மனியின் கோரப்படுகொலைகளுக்கு மிகத் தெளிவான மற்றுமொரு ஆதாரமாகும். இந்தப் படுகொலைகள் எல்லாமே ஹிட்லரின் தலைமையில் அவருக்கு தெரிந்து, அவரது உத்தரவின் பேரில்தான் நடைபெற்றது என ஆவணங்களின் அடிப்படையில் வரலாற்றில் விளக்கப்படுகிறது.
ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்திலிருந்த சில வரலாற்று ஆசிரியர்களும் சில தலைவர்களும் ஐம்பது லட்சம் பேர் நாஸிக்களால் கொலை செய்யப்பட்டார்கள் என்று கூறப்படுவது கட்டுக்கதை என கூறி வருகின்றனர். இவர்கள் ய+தப்படுகொலை மறுதலிப்பாளர்கள் என்று மற்றவர்களாhல் அழைக்கப்பட்டாலும்; அவர்கள் தங்களை ய+தப்படுகொலை மீள்பார்வையாளர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். 1979ல் வரலாற்று மீள்பார்வை கல்விமையம் உருவாக்கப்பட்டதிலிருந்து இவர்களது கருத்துக்கு ஆதரவு பெருகி வந்தது. தங்கள் கருத்துக்கு ஆதரவாக நிறைய வாதங்களை எடுத்து வைக்கும் இவர்கள் கருத்துப்படி விஷ வாயு அறைகள் என்ற ஒன்று முற்றிலும் புனையப்பட்ட கதையாகும். நாஸிக்கள் ஐம்பது முதல் அறுபது லட்சம் யூதர்களைக் கொலை செய்தனர் என்பது பொறுப்பற்ற வாதம் என்பதோடு அவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யா, இங்கிலாந்து, பாலஸ்தீனம் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று விட்டார்கள் என்பதும் இவர்கள் கருத்து. ய+தப்படுகொலை நடந்தது என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் புகைப்படங்களில் பல இரண்டாம் உலகப் போருக்கு பின்னர்தான் எடுக்கப்பட்டது என்பது படச்சுருள்களை ஆய்வு செய்யும் போது தெரிய வருகிறது என்றும் கூறுகிறார்கள். அப்படங்கள் போலியானவை என்பது மட்டுமில்லாமல் அவற்றில் பசி பட்டினியால் எலும்பும் தோலுமாய் உள்ளவர்களைக் காண முடிகிறதே தவிர விஷவாயு செலுத்தப்பட்டு இறந்தவர்களாகவோ அல்லது அதற்கு ஆதாரமாகவோ ஒரு புகைப்படமும் இல்லை. மேலும் ஹிட்லர் கையெழுத்திட்ட எந்த ஆவணமும் இதுவரையில் யாராலும் கைப்பற்றப்படவில்லை. இதன்மூலம் ஹிட்லரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே அவரது சகாக்கள் செய்த கொடுமைகள்தான் இந்த இனப் படுகொலைகள் என்று வாதிடுபவர்களும் உண்டு. நாசிக்கள் ஐம்பது லட்சம் பேரைக் கொன்றிருந்தால், அந்த உடல்களை எரிப்பதற்கு மிக அதிக அளவில் எரிசக்தி தேவைப்பட்டிருக்கும், அந்த அளவு எரிசக்தி ஜெர்மனியில் அப்போது இல்லை என்றும் கூறப்படுகிறது. ய+தர்கள் மீது ஒரு பச்சாபத்தை உருவாக்கி அதன் மூலமாக பாலஸ்தீனத்தில் ய+தர்களுக்காக தனி நாட்டை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது என்றும் இவர்கள் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கிறார்கள்.
வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் மறுக்கப்படுவது இது முதன் முறையல்ல. மாவோவின் அரசால் சீனாவில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாம் உலகப் போரில் மாண்டவர்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். ஆதாரங்களோடு நிரூபிக்கும் வரை இந்நிகழ்வு பல காலமாக மறுக்கப்பட்டு வந்தது. ஆர்மீனிய இனப் படுகொலைகளுக்கு காரணமான துருக்கி அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்படுகொலைகளை மறைத்து வந்தது. தற்போது ஐரோப்பியக் கூட்டமைப்பில் சேர வேண்டும் என்பதற்காகவே அந்நாடு தங்கள் நிலையில் இருந்து இறங்கி வந்திருக்கிறது. இதே போல்; போஸ்னிய செர்பியப் இனப்படுகொலைகளும், ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியப் பழங்குடி மக்களின் படுகொலைகளும் அந்தந்த தேசங்களின் அரசுகளால் முதலில் மறுக்கப்பட்டு வந்திருக்கின்றன. பின்னர் ஆதாரங்களில் அடிப்படையில் அவை நிரூபிக்கப்பட்டன.
எல்லாவற்றிற்கும் மேலாக ஈரான் அதிபர் முகமது அகமதின்ஜத் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது, ய+தப் படுகொலைகள், ய+தர்களுக்கு ஆதரவாகவும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட ஒரு தவறான பிரச்சாரம் எனக் கூறியுள்ளார். இவ்வாறு அரசுகளே இனப்படுகொலைகளை மறைக்கும் நிலைகளை மேற்கொண்டிருக்கின்றன என்பதையும் யூதப் படுகொலைகளை மறுதலிப்பவர்கள் தங்களுக்கு ஆதரவாக கூறிக் கொள்கிறார்கள்.
ஆனால் நாஸி ஜெர்மனியால் நடத்தப்பட்ட ய+தப் படுகொலைகள் உலகளாவிய ஒரு மோசமான நிகழ்வாக இருப்பதால் அதனை மறுதலிப்பது என்பது பெரும்பாலும் குற்றமாகவே கருதப்படுகிறது. டேவிட் இர்விங் 1970களில் வெளியிட்ட 'ஹிட்லரின் போர்" என்ற புத்தகத்தில் ஹிட்லருக்கு ஆதரவாக எழுதப்பட்ட சில கருத்துக்கள் பல ஐரோப்பிய நாடுகளில் சர்ச்சையைக் கிளப்பியது. 1989ல் ஆஸ்திரியாவில் ஒரு கூட்டத்தில் பேசிய டேவிட் இர்விங், ஹிட்லருக்குத் தெரியாமலேயேதான் ய+தப்படுகொலைகள் நடைபெற்றது எனவும், ஹிட்லர் மிகவும் புத்திசாலியானவர், ய+தர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் எனவும், யூதப்படுகொலைகள் வெறும் கட்டுக் கதை எனவும் பேசினார். இவ்வாறு நாஸிக்களின் யூதப் படுகொலைகளை மறுத்துப் பேசுவது ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற 11 நாடுகளின்; சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அப்போதே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பிப்ரவரி 20ம் தேதி ஆஸ்திரியா சென்ற அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1990க்குப் பிறகு யூதப்படுகொலைகளை மறுதலித்து தான் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என்று தற்போது கூறியுள்ள இர்விங், நாஸி ஜெர்மனியால் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டது உண்மைதான் என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும் தற்போது தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முகமது நபி கார்ட்டூன் விவகாரத்தின் பேச்சுரிமை பற்றி உலகளாவிய விவாதம் நடைபெற்று வரும் வேளையில் இப்பிரச்சனையில் ஐரோப்பிய நாடுகள் என்ன செய்யப்போகின்றன என்பதை உலகமே கவனித்து வருகிறது.

No comments: