Wednesday, November 08, 2006

கோகா - மருந்தா? போதையா?

பொருளாதாரத்தில் பின்தங்கிய சில லத்தீன் அமெரிக்க நாடுகள் கோகா பயிரிடுவதையை மிகவும் முக்கிய தொழிலாக கொண்டுள்ளன. அங்கு விவசாயமே கோகா பயிரிடுவதுதான். பண்டைய காலத்தில், கோகா இலைகள் சமயச் சடங்குகளுக்காகவும், மருந்தாகவும் பயன்பட்டு வந்திருக்கின்றன. தற்போதும் கூட நரம்பு சம்பந்தமான சில நோய்களுக்கு சிறந்த மருந்துகள் கோகா இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. கொகைன் என்ற போதைபொருள் தயாரிப்பிற்கு கோகா இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரு, பொலிவியா, கொலம்பியா ஆகிய தேசங்கள் இந்த மிக மோசமான போதைபொருள் உற்பத்திக்காக கோகாவை பயிரிடுகின்றன. உலகின் மூன்றில் இரண்டு பங்கு கோகா பெருவில் உருவாகிறது. மீதி பொலிவியாவிலும் கொலம்பியாவிலும் தயாராகின்றன. போதைபொருள் தயாரிப்பு என்பது தனிமனித ஒழுக்கத்தை மட்டுமில்லாமல் ஒரு தேசநலனையே பாதிக்கும் என்பதற்கு மேற்கூறிய மூன்று தேசங்களுமே உதாரணமாகும். கோகாவை பயிரிடுவதற்கு மிக மோசமான ரசாயன உரங்களும் ப+ச்சிக்கொல்லி, களைக்கொல்லி, ப+ஞ்சைக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுவதால் அங்கு சுற்றுச்சூழல் பிரச்சனை உருவாகிறது. மேலும் கிராமங்களில் வாழும் விவசாயிகள் அதிக வருமானம் வேண்டும் என்பதற்காக மிகவும் தவறான மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய நுட்பங்களை கையாளுகின்றனர். அமெரிக்கா அரசு கொகைன் தடுப்பிற்காக பெரு மற்றும் பொலிவியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சமூகத்தில் கிய+பாவில் பேட்டியளித்த பொலிவியாவின் புதிய அதிபர் கோகா உற்பத்தி செய்வதில் தாங்கள் பெருமை கொள்வதாக கூறியுள்ளார். கோகா இலைகள் பொருளாதார, சுற்றுச்சூழலில் பிரச்சனை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் அரசியல் ரீதியிலும் மிக மோசமான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. பெருவிலும், பொலிவியாவிலும் பல ராணுவப் புரட்சிக்கு கோகாவே காரணமாகும். தற்போதும் கூட அமெரிக்காவின் உதவியோடு பொலிவியாவில் ராணுவப் புரட்சி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.

No comments: