Wednesday, November 08, 2006

கார்பன் வெளியீடூ, சுற்றுச்சூழல் சீர்கேடு

சுற்றுச்சூழல் பிரச்சனையில் மிகப்பெரிய அங்கம் வகிப்பது கார்பன் வெளியீடுதான். கார்பன் வெளியீடு அதிகமாகும் போது சுற்றுச்சூழல் பாதிப்படைவது அதிகமாகும். இந்தியா கார்பன் வெளியீட்டில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகள் இந்தியாவை விட அதிக கார்பன் வெளியீட்டு அளவினைக் கொண்டுள்ளன. ஐரோப்பிய ய+னியனில் இருந்து திட்டங்களைப் பெற்று இந்திய அரசு கிரீன் ஹெளஸ் வாயுக்களையும் கார்பன் வெளியீட்டையும் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் கார்பன் வெளியீடு அதிகமாவதற்கு காரணம் நிலக்கரியின் பயன்பாடுதான். தரம் குறைந்த நிலக்கரிகளை அதிகத் தொழிற்சாலைகள் பயன்படுத்துவதால் அதிகக் குறைந்த சக்தி பெற அதிக அளவு நிலக்கரி பயன்படுத்தப்பட்டு அதனால் கார்பன் வெளியீடு அதிகமாகிறது. இந்தியாவின் தனிநபர் கார்பன் வெளியீடு 0.25 மெட்ரிக் டன்களாகும். இது உலக சராசரியில் கால் பங்கு குறைவுதான். அமெரிக்க அளவினை விட 22 பங்கு குறைவானதாகும். ஆனால் நகரமயமாதல், வாகன அதிகரிப்பு, தொடர்ந்த தரமற்ற நிலக்கரிகளைப் பயன்படுத்துவது போன்ற காரணங்கள் இந்தியாவின் தனி நபர் கார்பன் வெளியீடு மிக வேகமாக அதிகரிக்கக் கூடும். இது 2020ல் மூன்று மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக அதிகமான மக்கள் தொகையின் காரணமாக மிக அதிகமான மின்சாரத் தேவை ஏற்படுகிறது. இதுவே கார்பன் வெளியீட்டிற்கும் அதன் மூலம் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கும் காரணமாக அமைகிறது.

No comments: