Wednesday, November 08, 2006

தென் கிழக்காசியத் திட்டங்கள்

தென் கிழக்காசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தமிடப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுகின்றன. 2000ல் லாவோஸில் கையெழுத்தான மேகாங் - கங்கா திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படுமாயின் அது நிச்சயமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற உதவும். வியட்நாம், மியன்மர், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் இந்தியாவுடனான உறவு பலப்பட இந்த திட்டம் உதவுகிறது. இந்த திட்டத்தில் சீனாவும், பங்களாதேஷீம் பங்கேற்கவில்லை.
டீஐஆளுவு - நுஊ என்று கூறப்படும் டீயபெடயனநளா ஐனெயை ஆலயnஅயச-ளுசடையமெய வுhயடையனெ நுஉழழெஅiஉ ஊழ ழிநசயவழைn திட்டத்தின் மூலமாக தெற்காசிய நாடுகளின் பொருளாதார பலம் உயர்கிறது.
ஆசிய நெடுஞ்சாலைத் திட்டம் முழுமையடையும் பொழுது சிங்கப்ப+ர் மற்றும் புதுதில்லி நேரடியாக கோலாலம்ப+ர் மற்றும் கோசிமின் நகரம், பாங்காக், டாக்கா, கல்கத்தா போன்ற நகரங்கள் வழியாக இணைக்கப்படும்.
பொதுவாக திட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் மேற்பார்வையிலேயே நடைபெறுகின்றன. ஆனாலும் சிறிய கிழக்காசிய நாடுகளின் மேல் இந்தியா ஆதிக்கம் செலுத்துவது போன்ற தோற்றம் சமூக கால நடவடிக்கைகளில் தெரிகிறது. உதாரணமாக பிரதமர் மன்மோகன் சிங்கின் கோலாலம்ப+ர், ரசியான் மாநாட்டு உரை இதனை உறுதி செய்கிறது. உலக வர்த்தக அமைப்பின் கோட்பாடுகளை எதிர்க்கும் அதே பிரதமர் சிறிய நாடுகளிடம் அதே கொள்கையை திணிக்க முற்படும் விதமாக தடையிலா வர்த்தகம் செய்யும் யோசனையை தெரிவிக்கிறார். இந்தியா ஒரு ஆதிக்க சக்தியல்ல என்பதை மற்ற ஆசிய நாடுகளுக்கு உணர்த்தும் கடமை இந்தியாவுக்கு உள்ளது.

No comments: