Wednesday, November 08, 2006

நெருக்கடி தரப்போகும் எரிசக்தி

அமெரிக்கா பெட்ரோலியத்தின் அடிமை" என அந்த நாட்டிலேயே சொல்லப்படுவதுண்டு. அதிகமாகிக் கொண்டே போகும் பெட்ரோலிய விலையும் அதிக அளவில் பெட்ரோலிய வளங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு எதிரான தேசங்களும் அமெரிக்கர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியைத் தரப்போகின்றன. மாற்று எரிசக்தியைப் பயன்படுத்தும் வழியைக் காணாவிட்டால் உலகம் முழுமைக்குமே எரிசக்தியினால் நெருக்கடி ஏற்படப் போகும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. ஏற்கனவே எண்ணை மற்றும் எரிவாயுவினால் அமெரிக்கா பல மோசமான அனுபவங்களைக் கடந்த காலங்களில் பெற்றிருக்கிறது. இதே மாதிரியான பிரச்சனைகள் அமெரிக்காவின் பிரச்சனையோ அல்லது சில நாடுகளுக்கு மட்டும் உள்ள பிரச்சனையோ அல்ல. ஒட்டு மொத்தமாக ப+மியின் மேற்பரப்பில் உள்ள அனைத்து நாடுகளும் சிந்திக்க வேண்டிய பிரச்சனை. எரிசக்தி வளங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றங்ளை ஏற்படுத்துவது இயல்பு. ஆனால் இனி வரும் காலத்தில் அரசியல் மற்றும் சுற்றுச் சூழலில் ஏற்கனவே உள்ளதை விட அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறது.
உலக எரிசக்தி பிரச்சனை ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. 2006 புத்தாண்டு தினத்தில், உக்ரைனுக்கு அளித்து வந்த எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியதில்தான் இந்த பிரச்சனை ஆரம்பமானது. தற்போது சிறிய அளவில் விநியோகம் நடைபெற்று வந்தாலும் கூட, தன்னை உலகின் மிகப்பெரிய வல்லரசாக காட்டிக் கொள்ள ரஷ்யா தயாராகி விடுகிறது என்பதற்கான முன்னோட்டம் தான் இது. எண்ணை மற்றும் எரிவாயு வளங்களை ஈரான் தனது அணு ஆயுத சோதனை பற்றிய பிரச்சனை பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஈரானுக்கு எதிரான முடிவு எடுக்கப்பட்டால் எண்ணை ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்திவிடப்போவதாக அறிவித்திருக்கிறது. எண்ணை மற்றும் எரிவாயு வளங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதற்கு ஈரான் தயாராகி விட்டது என்பதற்கு இதுவே சாட்சி.
எரிசக்தி வளங்களை மற்ற நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவது ஒரு அபாயகரமான முடிவாகும். 1970களில் சவ+தி அரேபியா இந்த மாதிரியான ஒரு உத்தியை அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தியது. ஆனால் அந்த நாடுகள் தங்களுடைய எரிசக்தி தேவையை வேறு நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொண்டதால், சவ+தி அரேபியா மிகப்பெரும் இழப்பைச் சந்தித்தது.
சரியாகச் சொல்வதெனில், எரிசக்தி ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகள் இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன. இறக்குமதி செய்யும் நாடு தன்னுடைய எரிசக்தி தேவைக்காக ஏற்றுமதி செய்யும் நாட்டினையும், ஏற்றுமதி செய்யும் நாடு தன்னுடைய வருமானத்திற்காக இறக்குமதி செய்யும் நாட்டினையும் சார்ந்திருக்கிறது.
ஆனாலும் கூட, இந்த கருத்துக்களையெல்லாம் மீறி ரஷ்யா உக்ரைனுக்கு அளித்து வந்த எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது, ஐரோப்பிய நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் ஐந்தி;ல் ஒரு பங்கு எரிவாயு வளத்தை கொண்டுள்ள ரஷ்யா ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு தேவையில் கால்பகுதிக்கும் அதிகமாக ப+ர்த்தி செய்து வருகிறது. ஒருபக்கம் ஏந்திரமயமாதல் மூலமாக வளர்ச்சியடைந்து வரும் ஐரோப்பிய நாடுகள் அவற்றிற்காகவும் மக்களின் அன்றாட எரிசக்தி தேவைகளுக்காகவும் ரஷ்யாவை அதிகமாகச் சார்ந்திருக்கின்றன. இந்த வர்த்தகத்தின் மூலமாக ரஷ்யா மிக அதிகமான வருமானம் ஈட்டினாலும் உலகளாவிய பிரச்சனை ஏதாவது வரும்போது எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதன் மூலமாகவோ அல்லது குறைத்துக் கொள்வதன் மூலமாகவோ தனது கருத்தை நிலைநிறுத்துக் கொள்ளவே முற்படும். சமீபத்தில் ஈரான் அணு ஆயுத பிரச்சனையில் சீனா ஈரானுக்கு ஆதரவாக நடந்து கொள்வதற்கு மிக அடிப்படையான காரணம் ஈரானின் எண்ணை வளங்களேயாகும். ஏனெனில் ஈரானிடமிருந்து சீனா மிக அதிக அளவில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்கிறது. ஈரானுக்கு எதிராக முடிவெடுக்கும் பட்சத்தில் ஈரான், தனது கச்சா எண்ணை ஏற்றுமதியை நிறுத்திவிட வாய்ப்பிருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டே சீனா செயல்பட வேண்டிய நிலையிலிருக்கிறது.
தற்போது தேசங்களின் அரசியல், பொருளாதார நிலைகள் அவை பெற்றிருக்கும் இயற்கை எரிசக்தி வளங்களான, பெட்ரோலியம், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றைப் பொறுத்து வருங்காலத்தில் முற்றிலுமாக மாறிவிடப் போகிறது. இந்தக் கருத்தின் அடிப்படையில் பார்த்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் ரஷ்யா மீண்டும் உலகின் மிகப்பெரும் வல்லரசாக மாறிவிடும். ஈரான், நைஜீரியா போன்ற நாடுகள் கூட உலகின் அரசியல் மற்றும் பொருளாதாரப் போக்கினை தீர்மானிக்கும் சக்திகளாக உருவெடுக்கும். இதற்கு உதாரணமாக வெனிசுலா நாட்டினைக் கூறலாம். அமெரிக்காவிற்கு அரசியல் நெருக்கடி தருவதற்காக அந்நாடு தற்போது பெட்ரோலியப் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எரிசக்திக்காக பெரும்பாலும் பெட்ரோலிய கச்சா எண்ணை வளத்தையே உலக நாடுகள் நம்பியிருந்தன. இயற்கை எரிவாயு பயன்பாட்டில் இருந்தாலும் அது அப்போது "ஒரு நாட்டின் பொருளாதார பலத்தை மேம்படுத்தும் வளம்" என்பதை எந்த நாடும் அறிந்திருக்க வில்லை. பெட்ரோலியத்தின் தேவை அதிகமாகவே சில நாடுகள் மாற்று எரிசக்திக்காக முதலில் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்த ஆரம்பி;த்தன. முப்பத்;;;தைந்து வருடங்களுக்கு முன்பு கத்தாரில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டபோது அந்த நாட்டு அரசு முதலில் அதனை பெட்ரோலிய எண்ணை போன்றதொரு வருமானம் ஈட்டித்தருக்கூடிய வளமாகக் கருதவில்லை. ஆனால் தற்போது உலகின் மிகப்பெரும் இயற்கை எரிவாயு தொழிற்சாலை கத்தாரில் செயல்படுகிறது. அங்கு எரிவாயு திரவமாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்நாட்டின் பொருளாதாரம் இதன் மூலமே உயர்ந்துள்ளது.
ஆனால் உள்நாட்டுக் கட்டமைப்பு மற்றும் அரசியல் தரமானதாக இல்லை எனில் இயற்கை வளங்களைப் பெற்றிருக்கும் நாட்டு மக்களி;ன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்பது இயலாத காரியம். உதாரணமாக நைஜீரியா, ஆப்பிரிக்க கண்டத்திலேயே எண்ணை வளம் அதிகமாக உள்ள நாடாக இருந்த போதிலும் அங்கு பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாடுவதற்கு அந்நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற தன்மையே காரணம். ராணுவப் புரட்சிகளும், அடக்கு முறைகளும் தவறான பொருளாதார கொள்கைகளும், மிக மோசமான வெளிநாட்டு வர்த்தக உறவுகளும் நைஜீரியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து விட்டது.
உலகத்திற்கு எரிசக்தியால் வரப்போகும் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க மாற்று எரிசக்தியைக் கண்டறிவதைத் தவிர வேறு வழியில்லை. சூரிய ஒளியைப் பயன்படுத்துவதன் மூலமாகவும், காற்று சக்தியைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் மாற்று எரிசக்தி ஏற்கனவே கண்டறியப்பட்டிருக்கிறது. ஜப்பானில்தான் மாற்று எரிசக்தி அதிக அளவில் பயன்படுகிறது. சூரிய ஒளியில் இயங்கும் கார்களை ஜப்பான் ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. ஆனால் உண்மையில் உலகின் எரிசக்தி தேவையில் 2மூ மட்டுமே மாற்று எரிசக்தி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் மாற்று எரிசக்தியை உருவாக்குவதற்கு தேவையான உபகரணங்களின் அதிகமான விலையாகும். இதே போன்று பயோ டீசல் போன்ற தாவரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் எரி பொருட்களும் உலகின் எரிசக்தி தேவையில் மிகக் குறைந்த அளவே பூர்த்தி செய்ய முடியும். வருங்காலத்தில் எரிசக்தி தேவையால் நெருக்கடி ஏற்படும் போது மிக அதிகமாகப் பாதிக்கப்படப்போவது எரிசக்தி பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகள்தான். இதில் இந்தியா போன்ற வளரும் நாடுகளும் ஐரோப்பியக் கூட்டமைப்பும் பாதிக்கப்படும் என்ற கருத்து உள்ளது. இந்த நெருக்கடியில் இருந்த பாதுகாத்துக் கொள்வதற்காக கியூபா போன்ற சில நாடுகள் பெட்ரோலியப் பொருட்களின் உபயோகத்தை குறைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்றன. இதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுவதோடு மற்ற நாடுகள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் தடுக்க முடிகிறது. இதையே மற்ற நாடுகளும் பின்பற்றி நடந்தால் வருங்கால சந்ததிக்கு எரிசக்தித் தேவையால் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி என்பது இல்லாமல் போய்விடும்.

No comments: